இலங்கை தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு.!

Default Image

இலங்கைக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஹர்டிக் பாண்டியா தலைமையிலான டி-20 அணியையும், ரோஹித் சர்மா தலைமையிலான ஒருநாள் தொடர் அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

டி-20 தொடரில் ரோஹித் சர்மா, கே எல் ராகுல், விராட் கோலி, புவனேஷ்வர் குமார் போன்ற முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் டி-20 அணியில் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார். ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் இரு வகையான தொடர்களிலும் சேர்க்கப்படவில்லை.

டி-20 அணி: ஹர்திக் பாண்டியா (C), சூர்யகுமார் யாதவ் (VC), இஷான் கிஷன் (WK), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன் (WK), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல் , உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்

ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (C), ஹர்திக் பாண்டியா (VC), ஷுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிஷன் (WK), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ் , உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்