கொரோனா பரவலுக்கு எச்சில் முக்கிய காரணமாக கருதுவதால், இனிமேல் பந்துகளின் எச்சில் தடவக்கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு கொரோனா பரவலுக்கு எச்சில் முக்கிய காரணமாக கருதுவதால், பந்து வீச்சாளர்கள் பந்துகளின் பளபளப்புக்கு எச்சில் தடவக்கூடாது என்று ஐசிசிஐ தெரிவித்தது. இதுதொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அனில் கும்ப்ளே தலைமையிலான தொழில்நுட்ப குழு, மருத்துவ துறை தலைவருடன் ஆலோசனை செய்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அறிவித்தனர்.
இதுகுறித்து கூறிய அனில் குப்ளே, நாம் தற்போது அசாதாரண சூழ்நிலையில் வாழ்கிறோம் என்றும் மருத்துவ குழு அளித்துள்ள பரிந்துரைகள், சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதுகாக்கும் என்று கூறினார். அதே வேளையில் எங்கள் விளையாட்டின் சாரத்தை பாதுகாக்கும் வகையில் கிரிக்கெட்டை பாதுகாப்பாக மீண்டும் தொடங்குவதற்கான இடைக்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இந்நிலையில், பந்து வீச்சாளர்கள் பந்துகளின் எச்சில் தடவுவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தற்காலிகமானதே என்று ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டி தலைவர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், பாதிப்பு கட்டுக்குள் வந்து விட்டால், இந்த தடை வாபஸ் பெறப்படும் என்றும் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். மேலும், பந்தில் எச்சில் தடவுவதை நிறுத்தினால், ரிவர்ஸ் சிவிங் கலையை மேற்கொள்ள முடியாது என்று பந்து வீச்சாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அனில் கும்ப்ளே விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…