இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது. இந்நிலையில், இந்திய அணி தோல்வி அடைந்தது பற்றியும் சுப்மன் கில் பேட்டிங் பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இந்தியா தோல்வி குறித்து கும்ப்ளே
இந்திய கிரிக்கெட் அணி நன்றாக தான் விளையாடினார்கள். ஒரு சில இடங்களில் சில தவறுகள் நடந்தது. அந்த தவறுகளை அடுத்தப்போட்டிகளில் திருத்தி விளையாடவேண்டும். என்னைப்பொறுத்தவரை முதல் போட்டியில் இந்தியா இன்னும் நன்றாக விளையாடி இருக்கலாம். குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் சற்று சொதப்பல் நடந்தது. ரோஹித் சர்மா, ஜடேஜா ஆகியோர் எல்லாம் அட்டமிழந்த சமயத்தில் தான் போட்டியே மாறியது. இங்கிலாந்து அணி மிகவும் அருமையாக விளையாடினார்கள்.
சுப்மன் குறித்து அனில் கும்ப்ளே
சுப்மன் கில் பேட்டிங் குறித்து பேசிய அனில் கும்ப்ளே ” இன்னும் சுப்மன் கில் சில பயிற்சிகளை எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று எனக்கு தோணுகிறது. ஏனென்றால்,அவர் டெஸ்ட் போட்டிகளில் எப்படி ரன்களை அடிக்கவேண்டும் என்பதனை கற்றுக்கொள்ளவேண்டும். இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடி இருக்கும் புஜாராவுக்கு கிடைக்காத வாய்ப்பு கில்லுக்கு கிடைத்திருக்கிறது.
இந்த பலம் போதுமா? ரோட்னி ஹாக்கு கெத்தாக பதில் சொன்ன கிரேக் பிராத்வைட்!
எனவே, அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எப்படியெல்லாம் விளையாடலாம் என்று சொல்லி கொடுக்க அவர் பக்கம் ராகுல் ட்ராவிட் இருக்கிறார். எனவே, அவர் சொல்வதை கேட்டுவிட்டு அடுத்தடுத்த போட்டிகளில் நன்றாக விளையாட முயற்சி செய்யவேண்டும். அதேசமயம் புஜாராவும் விளையாடி நீண்ட காலமாக ஆகவில்லை எனவே, கில் சரியாக விளையாடவில்லை என்றால் அடுத்ததாக வரும் போட்டிகளில் அவர் மீது அழுத்தம் அதிகமாகிவிடும் அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளும் குறைய தொடங்கும்” எனவும் அனில் கும்ப்ளே கூறியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…