பாகிஸ்தானை அலரவிட்ட அமெரிக்கா ..!! சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!!

Published by
அகில் R

டி20I: டி20 உலகக்கோப்பை தொடரின் 11-வது போட்டியில் இன்று பாகிஸ்தான் அணியும், அமெரிக்கா அணியும் டல்லாஸ்ஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள்.

அதன்பின் களமிறங்கிய ஷதாப் கான், பாபர் ஆசம் நிதானத்துடன் கூடிய அதிரடி ஆட்டத்தால் ஸ்கோரை உயர்த்தினார்கள். இதன் மூலம் ஷதாப் கான் 25 பந்துக்கு 40 ரன்களும், பாபர் ஆசம் 33 பந்துக்கு 29 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

அதனை தொடர்ந்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது அமெரிக்கா அணி. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய அமெரிக்கா அணி பவர்பிளே முடிவில் 44 ரன்களை கடந்தது. அதனை தொடர்ந்து விளையாடிய அமெரிக்கா அணி தேவையான நேரத்தில் பவுண்டரி, சிக்ஸர் அடித்து போட்டியை சமநிலையில் வைத்திருந்தனர்.

பாகிஸ்தானின் ஆக்ரோஷமான பந்து வீச்சை எளிமையாக அமெரிக்கா அணி சமாளித்து ரன்களையும் குவித்தது. குறிப்பாக அமெரிக்க அணியின் கேப்டனான மோனான்க் பட்டெல் 38 பந்துக்கு 50 ரன்கள் எடுத்து அசத்தினார். அவரை தொடர்ந்து ஆண்ட்ரூஸ் கௌஸ் 26 பந்துக்கு 35 ரன்கள் எடுத்திருந்தார்.  

இறுதி வரை விறுவிறுப்பாக சென்ற இந்த போட்டியில் கடைசி 6 பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்டது. தொடர்ந்து விளையாடிய அமெரிக்கா அணிக்கு  கடைசி பந்தில் 5 ரன்கள் அடிக்க வேண்டி இருந்த நிலையில் அந்த பந்தை பவுண்டரிக்கு அடித்து போட்டியை சமன் செய்தது.

இதனால், போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது. சுப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த அமெரிக்கா அணி 18 ரன்கள் நிர்ணயம் செய்தது. 19 ரன்கள் எடுத்தால், சூப்பர் ஓவரில் வெற்றி பெறலாம் களமிறங்கியது பாகிஸ்தான். அசத்தலாக பந்து வீசிய நெட்ரவால்கர் 11 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் அமெரிக்கா அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றியை பெற்றது. மேலும், முதல் முறையாக பாகிஸ்தான் அணி அமெரிக்கா அணியிடம் தோல்வியை பெற்றுள்ளது.

 

Published by
அகில் R

Recent Posts

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

3 minutes ago

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

35 minutes ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

2 hours ago

காஷ்மீர் பயங்கரவாதிகள் ‘சுதந்திரப் போராளிகள்’.., புகழ்ந்து பேசிய பாக்., துணைப் பிரதமர்.!

இஸ்லாமாபாத் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன. முதலில் இந்தியா சிந்து…

3 hours ago

லஷ்கர் – இ – தொய்பா தளபதி சுட்டுக்கொலை.! இந்திய ராணுவம் அதிரடி..!!

பந்திபோரா : ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் இன்று காலை பயங்கரவாதிகள் இருப்பதாகக் கிடைத்த குறிப்பிட்ட உளவுத்துறை தகவலின் பேரில், இந்திய…

3 hours ago

ஆளுநர் நடத்தும் மாநாடு : அரசு & தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் புறக்கணிப்பு.!

உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…

5 hours ago