நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் என்று அம்பதி ராயுடு விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக விளையாடி வந்தவர் அம்பதி ராயுடு.இவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது .ஆனால் அம்பதி ராயுடு அணியில் சேர்க்காமல் அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.உலகக்கோப்பை தொடரில் தவான் காயம் காரணமாக விலகினார். அப்போதாவது வாய்ப்பு கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் கிடைக்கவில்லை.
உலகக்கோப்பை தொடரில் தான் தேர்வு செய்யப்படாததை குறித்து வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தார்.பின்னர் அம்பதி ராயுடு அனைத்து சர்வேதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.இவரது அறிவிப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தற்போது தனது ஒய்வு முடிவை அம்பதி ராயுடு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கு ராயுடு மெயில் அனுப்பியுள்ளார்.அதில் ,தனது ஓய்வு முடிவை திரும்பப் பெறுவதாக தெரிவித்துள்ளார். மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார் . ஓய்வு பெறுவதாக அறிவித்த முடிவு உணர்ச்சிபூர்வமான நிலையிலும் அவசரத்திலும் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.
இந்த நெருக்கடியான சூழலில் எனக்குள் மீதியிருக்கும் கிரிக்கெட் திறனை உணர்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தினருக்கும், விவிஎஸ் லக்ஷ்மனன் மற்றும் நோயல் டேவிட் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…