காயம் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல்.
நேற்று முன்தினம் மும்பையில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்த போட்டியில் பீல்டிங் செய்யும் போது ராஜஸ்தான் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் ரியான் பராக் ஓவரில் கெயில் அடித்த பந்தை ஓடி வந்து டைவ் அடித்து பென் ஸ்டோக்ஸ் கேட்சை பிடித்தார். இந்த கேட்சை பிடித்தபோது காயம் ஏற்பட்டது. காயத்துடன் பென் ஸ்டோக்ஸ் போட்டியில் விளையாடினார்.
பின்னர், போட்டி முடிந்த பிறகு வலி அதிகமானது. இதனால், ஸ்கேன் செய்யப்பட்டது. இந்த ஸ்கேனில் கையில் விரல் எலும்பு முறிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், கைவிரல் முறிவு காரணமாக பென் ஸ்டோக்ஸ் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 1 ஓவர் வீசி 12 ரன்கள் கொடுத்தார். 1 விக்கெட் கூட எடுக்கவில்லை. மேலும், பேட்டிங்கிலும் டக் அவுட் ஆகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
உதகை : மாநில, மத்திய, தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று நடக்கிறது. உதகை ராஜ்பவனில் நடக்கும் இந்த…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, …
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…