கிரிக்கெட்

சச்சின், ரோஹித் பிறகு உலகக்கோப்பையில் சாதனை படைத்த டேவிட் வார்னர்..!

Published by
murugan

நேற்று ஈடன் கார்டன் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான ஐசிசி உலகக்கோப்பை இரண்டாவது அரையிறுதியில் மூத்த ஆஸ்திரேலிய தொடக்க வீரர் டேவிட் வார்னர் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

நேற்று முதலில் இறங்கிய தென்னாப்பிரிக்கா 212 ரன்கள் எடுக்க 213 என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் இறங்கினர். இவர்கள் இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள் 60 ரன் பார்ட்னர்ஷிப்பைப் பதிவு செய்தனர். அதிலும் வார்னர் பவர்பிளேயில் நான்கு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 29 ரன்கள் எடுத்தபோது ஆறாவது ஓவரில் தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் மார்க்ரம் வார்னரை போல்ட் செய்தார்.

முதல் ஆஸ்திரேலிய வீரர்:

வார்னர் 18 பந்துகளில் 29 ரன்கள் எடுத்ததன் மூலம் நடப்பு உலகக்கோப்பையில் 528 ரன்கள் எடுத்துள்ளார். இதன் காரணமாக உலகக்கோப்பையில் இரண்டாவது முறையாக 500 ரன்னிற்கு மேல் கடந்த முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை டேவிட் வார்னர் படைத்துள்ளார்.

2019 உலகக்கோப்பையில் வார்னர் முதல் முறையாக 500 ரன்னிற்கு மேல் அடித்தார். வார்னரைத் தவிர ஆஸ்திரேலிய அணியில் ரிக்கி பாண்டிங் (2007), மேத்யூ ஹெய்டன் (2007) மற்றும் ஆரோன் பின்ச் (2019) ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்காக ஒரே உலகக் கோப்பையில் 500 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளனர்.

இரண்டு உலகக்கோப்பைகளில் 500 ரன்னிற்கு மேல் எடுத்த வீரர்கள்:

இந்த சாதனை மூலம் இவர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மாவுடன் இணைந்துள்ளார். இரண்டு உலகக்கோப்பைகளில் 500 ரன்னிற்கு  எடுத்த மூன்றாவது வீரர் வார்னர் ஆவார். முன்னதாக, மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் 1996 மற்றும் 2003  உலகக்கோப்பைகளிலும், இந்திய அணியின் கேப்டனும், தொடக்க வீரருமான ரோஹித் 2019 மற்றும் 2023 உலகக்கோப்பைகளில் 500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

5 mins ago

ஐபிஎல் 2025 : கேப்டன் பொறுப்பிலிருந்து வெளியேறுகிறார் ‘ரிஷப் பண்ட்’? காரணம் இதுதான்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர…

26 mins ago

துலாபார வழிபாடும் அதன் பலன்களும் ..!

சென்னை -துன்பங்களை துரத்தியடிக்கும் துலாபாரம் கொடுக்கும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம். துலாபாரம்…

30 mins ago

ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்.! தவெக தொண்டர்களுக்கு அரசியல் பயிலகம் தொடக்கம்…

சென்னை : சினிமாவில் உச்சநட்சத்திரமாக இருந்து தற்போது அரசியல் களத்தில் இறங்கியுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை…

44 mins ago

கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…

56 mins ago

பருப்பு விவகாரம்., “பாஜகவின் ஆதாரமற்ற குற்றசாட்டு.!” தமிழக அரசு வெளியிட்ட விளக்க அறிக்கை..,

சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…

1 hour ago