ஜெய்ஸ்வாலுக்கு பிறகு இவர் தான் ..இவராலும் செய்ய முடியும்! மைக்கேல் வாகன் பேட்டி!

Published by
அகில் R

சென்னை : யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அடுத்த படியாக அபிஷேக் சர்மா தான் அனைத்து வித கிரிக்கெட்டிலும் தகுதியானவர் என மைக்கேல் வாகன் கூறி இருக்கிறார்.

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி கலக்கி கொண்டிருக்கும் இளம் பேட்ஸ்ட்மேன் தான் அபிஷேக் சர்மா. இவர் இந்த ஐபிஎல் தொடரில் 41 சிக்ஸர்கள் அடித்து ஆரஞ்சு தொப்பி கைப்பற்றியுள்ள விராட் கோலியை தாண்டி முன்னிலையில் இருக்கிறார். மேலும், இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி, 155.78 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டுடன் 467 ரன்களை குவித்துள்ளார்.

தற்போது, இவரை புகழ்ந்ததுடன் இவர் அனைத்து வித கிரிக்கெட்டிருக்கும் தகுதியுடையவர் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான மைக்கேல் வாகன் தற்போது கிரிக்பஸ்ஸுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். அவர் பேசிய போது,”இந்த ஆண்டு இந்திய அணிக்கு ஐபிஎல் தொடரிலிருந்து அபிஷேக் சர்மா கிடைத்துள்ளார் எப்படி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஜெய்ஸ்வால் இந்திய அணிக்காக கிடைத்தாரோ அதே போல இந்த ஆண்டு இந்திய அணிக்கு கிடைத்தவர் தான் அபிஷேக் சர்மா.

கடந்த ஆண்டு ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதும் உடனே இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. மேலும், அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவர் வெற்றி பெற்றவராக இருக்கிறார். இதை அபிஷேக் சர்மாவாலும் செய்ய முடியும், அவருக்கும் நல்ல பேட்டிங் டெக்னிக் கிடைத்திருப்பதால் அவராலும் ஜெய்ஸ்வாலை போல இந்திய அணிக்காக மூன்று வடிவத்திலும் விளையாட முடியும்.

அவர் பிரையன் லாரா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரிடம் இருந்த வில்லோ ஸ்விங்கை கற்றுக்கொண்டு உள்ளார். ஜெய்ஸ்வாலை பற்றி கூற வேண்டும் என்றால் ஒரு ஆச்சரியமான கதை. சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்ததிலிருந்து அவர் ஆதிக்கம் அதிகமாகசெலுத்த தொடங்கினார். அவர் விளையாடுவதை பார்க்கும் பொழுது 15 வருடம் கிரிக்கெட் அனுபவம் கொண்டவர் விளையாடியவது போன்று இருக்கும். தற்பொழுது, அபிஷேக் ஷர்மாவுக்கும் அது வெகு தொலைவில் இல்லை”, என கிரிக்பஸ்ஸுக்கு அளித்த பேட்டியில் மைக்கேல் வாகன் கூறி இருந்தார்.

Published by
அகில் R

Recent Posts

ஜிவி – அனி சம்பவம்.., ஆட்டம் போட வைக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் சிங்கிள்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…

17 minutes ago

சினிமா சான்ஸ்… எங்கள் பெயரை சொல்லி மோசடி.! கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…

56 minutes ago

உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு : கஞ்சா வியாபாரி என்கவுண்டர்.!

மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…

57 minutes ago

தோனியின் கண் முன்னே… கலீல் அகமதுவை தள்ளிவிட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ…

சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…

2 hours ago

மியான்மர் நிலநடுக்கம் – தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு.!

பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…

3 hours ago

மக்கள் விருப்ப முதலமைச்சர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய தவெக தலைவர் விஜய்! முதலிடத்தில் யார் தெரியுமா?

சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…

4 hours ago