ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 286 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை தொடரின் 22 ஆவது லீக் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து. முதலில் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி சார்பில் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் 286 ரன்கள் எடுக்கப்பட்டது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 74 ரன்களும், தொடக்க ஆட்டக்காரரான ஷபீக் 58 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்தடுத்து வீரர்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து கொண்டுஇருக்கையில் ஷதாப் கான் இப்திகார் அகமது தலா 40 ரன்கள் எடுத்திருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது மூன்றுவிக்கெட்டையும், நவீன் இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். 287 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்க முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் 65 ரன்கள், இப்ராஹிம் சத்ரான் 87 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து ஜோடி சேர்ந்த அஸ்மத்துல்லா உமர்சாய், ரஹ்மத் ஷா இருவரும் அதிரடி காட்டினர். நிதானமாக விளையாடிய ரஹ்மத் ஷா அரைசதம் விளாசினார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 286 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் அஸ்மத்துல்லா உமர்சாய் 48*, ரஹ்மத் ஷா 77* ரன்களுடன் இருந்தனர்.
பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியையும், 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் 5 -வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியையும், 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்…
டெல்லி : மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல்…
டெல்லி :டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகத்…
கிருஷ்ணகிரி : மாவட்டத்தில் 8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசுப்பள்ளி ஆசிரியர்கள்…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3…