ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 286 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
உலகக்கோப்பை தொடரின் 22 ஆவது லீக் போட்டியில் இன்று பாகிஸ்தான் அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்து. முதலில் களம் இறங்கியது பாகிஸ்தான் அணி சார்பில் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் 286 ரன்கள் எடுக்கப்பட்டது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 74 ரன்களும், தொடக்க ஆட்டக்காரரான ஷபீக் 58 ரன்கள் எடுத்திருந்தார்.
அடுத்தடுத்து வீரர்கள் சீரான இடைவேளையில் விக்கெட்டை இழந்து கொண்டுஇருக்கையில் ஷதாப் கான் இப்திகார் அகமது தலா 40 ரன்கள் எடுத்திருந்தனர். ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது மூன்றுவிக்கெட்டையும், நவீன் இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். 287 ரன்கள் எடுத்திருந்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி தொடக்க முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் 65 ரன்கள், இப்ராஹிம் சத்ரான் 87 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து ஜோடி சேர்ந்த அஸ்மத்துல்லா உமர்சாய், ரஹ்மத் ஷா இருவரும் அதிரடி காட்டினர். நிதானமாக விளையாடிய ரஹ்மத் ஷா அரைசதம் விளாசினார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 286 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் அஸ்மத்துல்லா உமர்சாய் 48*, ரஹ்மத் ஷா 77* ரன்களுடன் இருந்தனர்.
பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியையும், 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் 5 -வது இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் தோல்வியையும், 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…