Devon Conway[file image]
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே.
ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரான டேவான் கான்வே தனது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலும் விலகி இருக்கிறார். மேலும், அந்த காயத்திலிருந்தும் தற்போது மீண்டு வந்து கொண்டும் இருக்கிறார். சிஎஸ்கே ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் காயம் காரணமாக தற்போது தொடரில் தொடரிலிருந்து விலகி உள்ளார்
ஆனாலும் சிஎஸ்கே அணியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒரு வேளை காயம் சரியானால் இவர் சென்னை அணி இனி விளையாட இருக்கும் ஏதேனும் ஒரு போட்டியில் விளையாடலாம் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இவர் தற்போது ஸ்போர்ட்ஸ் ஸ்டாருக்கு அளித்த ஒரு பேட்டியில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதிகளை இந்த முறை சேர்த்தது நல்லது தான் என கூறியுள்ளார்.
இதை குறித்து அவர் கூறியதாவது, “T20 கிரிக்கெட்டில் பந்து வீச்சாளர்களுக்கு நீண்ட கால சவாலாக இருக்கும் இரண்டு பவுன்சர் விதியை சேர்த்தது மிக முக்கியமான ஒன்றாகும். இது பேட்ஸ்மேன்களை புதிதாக யூகிக்கவும் அவர்களுக்கு உதவிகிறது.
அதே நேரம் இதன் மூலம் வெவ்வேறு போட்டிகளில் அவர்கள் மீது அழுத்தத்தைப் ஏற்படுத்துவதற்கு பவுளர்களுக்கும் வழிகளை இந்த விதி உருவாக்குகிறது.
மேலும் எதிர்காலத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் நடைமுறை படுத்தப்படுமா என்று எனக்குத் தெரியவில்லை”, என்று ஸ்போர்ட்ஸ் ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…