#IPLBreaking: “மரண படுக்கையில் குடும்ப உறுப்பினரைக் கொண்ட ஒருவர் எப்படி கிரிக்கெட்டை ரசித்து பார்க்க முடியும்”-ஆடம் ஸாம்பா..!

Published by
Edison

ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியது குறித்து ஆஸ்திரேலிய லெக் ஸ்பின்னர் ஆடம் ஸாம்பா செவ்வாய்க்கிழமை நடந்த பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் அதிகமாக இருப்பதால் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது குறித்து வீரர்களிடையே தயக்கம் நிலவி வருகிறது.

இந்த நிலையில்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வீரர்களான ஆடம் ஸாம்பா மற்றும் கேன் ரிச்சர்ட்சன் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களைக் கூறி செவ்வாய்க்கிழமை தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினர்.

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகியது குறித்து ஆடம் ஸாம்பா கூறுகையில்,”ஆறு மாதங்களுக்கு முன்பு துபாயில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியானது மிகவும் பாதுகாப்பானதாக இருந்தது.அதனால் இந்த ஐபிஎல் போட்டிகளையும் துபாயில் நடத்தியிருக்கலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.இருப்பினும்,அதில் நிறைய அரசியல் காரணங்கள் உள்ளன.

கொரோனா பரவல் இருந்தாலும் நாங்கள் இப்போது ஒரு பாதுகாப்பு வளையத்துக்குள்தான் இருக்கிறோம்,எனினும் இது இந்தியா என்பதால் கூடுதல் கவனமுடன் இருக்க வேண்டிய நிலைமையில் உள்ளோம். ஏனெனில்,கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து வருகிறது.மேலும்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு மரண படுக்கையில் குடும்ப உறுப்பினரைக் கொண்ட ஒருவர் எப்படி கிரிக்கெட்டை ரசித்து பார்க்க முடியும்.

இதன் காரணமாகவே,எனக்கு பயிற்சிக்கு செல்ல ஆர்வம் இல்லாமல் இருந்தது.அதனால் பயிற்சிக்கு தாமதமாக சென்றேன்.அதுமட்டுமல்லாமல், வெளிநாடு செல்பவர்களின் விமானங்கள் தடை செய்யப்படுகிறது. எனவே,நாட்டிற்கு திரும்ப இதுவே சரியான நேரம் என்று எனக்கு தோன்றியது”,என்று கூறியுள்ளார்.

Published by
Edison

Recent Posts

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

27 minutes ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

37 minutes ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

1 hour ago

MIv s LSG: ரிக்கல்டன் – சூர்யகுமாரின் வெறித்தனமான ஆட்டம்.., மிரண்டு போன லக்னோவுக்கு பெரிய இலக்கு.!

மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

2 hours ago

“இந்தியாவை தாக்க 130 அணுகுண்டுகள் தயார்” – பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு எச்சரிகை.!

ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…

3 hours ago

எம்.சாண்ட், பி-சாண்ட், ஜல்லி விலை ரூ.1,000 குறைப்பு.!

சென்னை: தமிழகத்தில் கனிம வளங்கள் அடிப்படை யில், நில வரி விதிப்பதற்கு, குவாரி உரிமையா ளர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது.…

3 hours ago