விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் இன்று ஒரேநாளில் பல சாதனைகளை படைத்த தமிழ்நாடு அணி.
விஜய் ஹசாரே தொடரில் இன்று தமிழ்நாடு மற்றும் அருணாச்சல பிரதேச அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் குவித்து இமாலய சாதனை படைத்துள்ளது.
முதல்தர கிரிக்கெட்டில் ஒரு அணி 50 ஓவர்களில் 500 ரன்களைக் கடப்பது இதுவே முதல்முறையாகும். இதே போட்டியில் ஜெகதீசன் மற்றும் சுதர்சன் முதல் விக்கெட்டுக்கு 416 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர். தமிழ்நாடு அணியில் அதிகபட்சமாக ஜெகதீசன் 25போர்கள் மற்றும் 15 சிக்ஸர்களுடன் 277 ரன்கள் குவித்து மற்றொரு சாதனை படைத்தார்.
ஒருநாள் போட்டியில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக 277 ரன்கள் குவித்து ஜெகதீசன் வரலாற்று சாதனை படைத்தார். இன்றைய போட்டியில் ஜெகதீசன், அருணாச்சல பிரதேச அணிக்கெதிராக 5 ஆவது சதத்தை அடித்ததுடன் முதல்தர போட்டிகளில் தொடர்ச்சியாக 5 சதமடித்து சாதனையும் படைத்துள்ளார். இதன்மூலம் ஒரேபோட்டியில் தமிழ்நாடு அணி பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது.
சென்னை : கடந்த வாரம் உச்சமடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. வார தொடக்க நாளான நேற்று…
டெல்லி : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய…
போர்ட் லூயிஸ் : கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொரிஷியஸ் நாட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டு…
சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…