அபிஷேக் – ருதுராஜ் அசத்தல்..! விட்டதை பிடித்த இந்திய அணி …100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

Published by
அகில் R

ZIMvsIND : இன்று நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே அணி இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில் நேற்றைய முதல் போட்டியில் இந்திய அணி ஜிம்பாவே அணியிடம் படுதோல்வி அடைந்தது. அதனைத் தொடர்ந்து இன்றைய நாளில் 2-வது டி20 போட்டியானது நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

அதன்படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கில்லும், அபிஷேக் ஷர்மாவும் அதிரடி காட்ட தொடங்கினர். ஆனால், துரதிஷ்டவசமாக கில் ஆட்டம் இழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ருதுராஜ், அபிஷேக் ஷர்மாவுடன் இணைந்து விளையாட்டினார். அந்த அதிரடியானஆட்டத்தில் அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடரில் எப்படி அதிரடி காட்டினாரோ அதே அதிரடியில் விளையாடினார். அதனால், வெறும் 47 பந்தில் 100 ரன்கள் விளாசினார், இதனால் சர்வதேச போட்டியில் அறிமுகமான 2-வந்து போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

அவருடன் விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் நிதானமாக விளையாடி 77 ரன்கள் சேர்த்தார்.  அதை தொடர்ந்து அபிஷேக் சர்மா 100 ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில், ரிங்கு சிங்கின் ஒரு அதிரடி கேமியோவால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் பெரும் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 234 என்ற இமாலய ரன்னை எடுத்தது.

அதை தொடர்ந்து இமாலய இலக்கான 235 ரன்கள் எடுக்க பேட்டிங் களம் இறங்கியது ஜிம்பாப்வே அணி. ஆனால், இந்திய அணியின் அபார பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், ஜிம்பாப்வே அணியின் வீரர்களான வெஸ்லி மாதேவெரேவும், லூக் ஜாங்வேவும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

அதில், வெஸ்லி 43 ரன்களும், வெஸ்லி 33 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர், ஆனாலும் அது ஜிம்பாப்வே அணிக்கு கைகொடுக்கவில்லை. இதனால், ஜிம்பாப்வே அணி 18.4 ஓவர்களில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதன் மூலம் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என சமன் செய்துள்ளது, மேலும் நேற்று கண்ட படுதோல்விக்கு திருப்பி கொடுத்து விட்டதை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

ஜிவி – அனி சம்பவம்.., ஆட்டம் போட வைக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் செகண்ட் சிங்கிள்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…

8 minutes ago

சினிமா சான்ஸ்… எங்கள் பெயரை சொல்லி மோசடி.! கமல் தயாரிப்பு நிறுவனம் எச்சரிக்கை.!

சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…

46 minutes ago

உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கு : கஞ்சா வியாபாரி என்கவுண்டர்.!

மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…

48 minutes ago

தோனியின் கண் முன்னே… கலீல் அகமதுவை தள்ளிவிட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ…

சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…

2 hours ago

மியான்மர் நிலநடுக்கம் – தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு.!

பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…

3 hours ago

மக்கள் விருப்ப முதலமைச்சர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய தவெக தலைவர் விஜய்! முதலிடத்தில் யார் தெரியுமா?

சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…

4 hours ago