முக்கியச் செய்திகள்

சதம் விளாசிய அப்துல்லா, முகமது ரிஸ்வான்… பாகிஸ்தான் அபார வெற்றி …!

Published by
murugan

பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று ஒருநாள் உலகக்கோப்பையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.  இப்போட்டியில் குசல் மெண்டிஸ் அபாரமாக பேட்டிங் செய்த அதே வேளையில் அவர் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையையும் படைத்துள்ளார். இலங்கையின் ஆரம்பம் மிகவும் மோசமாக இருந்தது.

காரணம் தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா ஹசன் அலியின் பந்தில் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.  ஆனால் இதன் பின்னர் பாத்தும் நிஷங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்தனர். நிஷாங்கா அரைசதம் அடித்து அவுட்டானார். அவர் 51 ரன்கள் எடுத்தார். மெண்டிஸ் அதிரடியாக ரன்களை குவித்தார். அவர் 65 பந்துகளில் சதம் விளாசி 77 பந்துகளில் 14 பவுண்டரிகள், 6 சிக்ஸர் என மொத்தம்  122 ரன்கள் குவித்தார். இதன் மூலம் மெண்டிஸ் ஒருநாள் உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையை பெற்றார்.

அடுத்து இறங்கிய சதீர சமரவிக்ரம நிதானமாக விளையாடி 89 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர் என 108 ரன்கள் எடுத்தார். அடுத்து களம் கண்ட அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தனர்.  இலங்கை அணியில்  ஹசன் அலி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டையும்  வீழ்த்தினார்கள். 345 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபிக் ,  இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர்.

இமாம்-உல்-ஹக் வந்த வேகத்தில் 12 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் நிலைத்து நின்று விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது ஏமாற்றத்தில் முடிந்தது. பாபர் அசாம் வெறும் 10 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.  இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய அப்துல்லா ஷபிக் 103 பந்தில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர் உட்பட 113 ரன் எடுத்து பத்திரனா ஓவரில் பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும்  முகமது ரிஸ்வான் நிதானமாகவும் , பொறுப்புடன் விளையாடி சதம் விளாசி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். முகமது ரிஸ்வான் 121 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் என மொத்தம்  134* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டை பறித்தார்.

Published by
murugan
Tags: #PAKvSL

Recent Posts

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

7 minutes ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

1 hour ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

2 hours ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

2 hours ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

2 hours ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

3 hours ago