முக்கியச் செய்திகள்

சதம் விளாசிய அப்துல்லா, முகமது ரிஸ்வான்… பாகிஸ்தான் அபார வெற்றி …!

Published by
murugan

பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இன்று ஒருநாள் உலகக்கோப்பையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.  இப்போட்டியில் குசல் மெண்டிஸ் அபாரமாக பேட்டிங் செய்த அதே வேளையில் அவர் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையையும் படைத்துள்ளார். இலங்கையின் ஆரம்பம் மிகவும் மோசமாக இருந்தது.

காரணம் தொடக்க ஆட்டக்காரர் குசல் பெரேரா ஹசன் அலியின் பந்தில் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.  ஆனால் இதன் பின்னர் பாத்தும் நிஷங்க மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்தனர். நிஷாங்கா அரைசதம் அடித்து அவுட்டானார். அவர் 51 ரன்கள் எடுத்தார். மெண்டிஸ் அதிரடியாக ரன்களை குவித்தார். அவர் 65 பந்துகளில் சதம் விளாசி 77 பந்துகளில் 14 பவுண்டரிகள், 6 சிக்ஸர் என மொத்தம்  122 ரன்கள் குவித்தார். இதன் மூலம் மெண்டிஸ் ஒருநாள் உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த இலங்கை வீரர் என்ற சாதனையை பெற்றார்.

அடுத்து இறங்கிய சதீர சமரவிக்ரம நிதானமாக விளையாடி 89 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர் என 108 ரன்கள் எடுத்தார். அடுத்து களம் கண்ட அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் வெளியேற இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 344 ரன்கள் எடுத்தனர்.  இலங்கை அணியில்  ஹசன் அலி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ரவூப் 2 விக்கெட்டையும்  வீழ்த்தினார்கள். 345 ரன்கள் இலக்குடன் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷபிக் ,  இமாம்-உல்-ஹக் இருவரும் களமிறங்கினர்.

இமாம்-உல்-ஹக் வந்த வேகத்தில் 12 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் நிலைத்து நின்று விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அது ஏமாற்றத்தில் முடிந்தது. பாபர் அசாம் வெறும் 10 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். பின்னர் அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான் இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர்.  இதனால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது. சிறப்பாக விளையாடிய அப்துல்லா ஷபிக் 103 பந்தில் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸர் உட்பட 113 ரன் எடுத்து பத்திரனா ஓவரில் பெவிலியன் திரும்பினார்.

இருப்பினும்  முகமது ரிஸ்வான் நிதானமாகவும் , பொறுப்புடன் விளையாடி சதம் விளாசி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றார். முகமது ரிஸ்வான் 121 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர் என மொத்தம்  134* ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இறுதியாக பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 348 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இலங்கை அணியில் தில்ஷான் மதுஷங்க 2 விக்கெட்டை பறித்தார்.

Published by
murugan
Tags: #PAKvSL

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

4 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

5 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

5 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

5 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

5 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

5 hours ago