என்னங்க பேட்டிங் இது? லக்னோவை விளாசி தள்ளிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Published by
பால முருகன்

சென்னை : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி தோல்வி அடைந்த நிலையில், லக்னோ அணி பேட்டிங் தான் தோல்விக்கு காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா விமர்சித்து பேசியுள்ளார்.

மே 14-ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 208  ரன்கள் எடுத்தது.

அடுத்ததாக 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி களமிறங்கியது. தொடக்கத்தில் இருந்தே தடுமாறி விளையாடி வந்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், போட்டியில் லக்னோ அணி தோல்வி அடைந்தது பற்றி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனல் பக்கத்தில் வீடியோ வெளியீட்டு விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” டெல்லி அணிக்கு எதிராக லக்னோ பேட்டிங் செய்தது எனக்கு சுத்தமாக புரியவில்லை. என்ன பேட்டிங் செய்கிறீர்கள் நீங்கள் என்று நான் கேட்கிறேன்.

தொடக்கத்தில் வந்த குயின்டன் டி காக் ரன்கள் அடிக்கவில்லை, கே.எல். ராகுல் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பிறகு, (மார்கஸ்) ஸ்டோனிஸ் வந்தார், அவர் நடுவில் சிக்கினார். தீபக் ஹூடா பூஜ்ஜியத்திற்கு வெளியேறினார். தொடர்ச்சியாக இப்படி விக்கெட்களை இழந்தால் நன்றாகவா இருக்கு? எப்படி இப்படி மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்துகிறீர்கள்? நிக்கோலஸ் பூரன் இருக்கும் வரை, போட்டி உயிருடன் இருந்தது.

அவருடைய அதிரடியான ஆட்டம் காரணமாக தான் இந்த அளவுக்கு சென்று தோல்வி அடைந்தீர்கள். இருந்தாலும் நீங்கள் அடிக்க வேண்டிய டார்கெட் ரொம்ப பெரியது இல்லை எனவே விக்கெட்களை விடாமல் விளையாடி இருந்தாலே இந்த இலக்கை ஈசியாக அடித்து இருக்கலாம். மோசமான பேட்டிங் காரணமாக தான் லக்னோ அணி தோல்வி அடைந்து விட்டது” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

இலங்கையில் உள்ள தமிழர்களுக்காக 10,000 வீடுகள் கட்டுக்கொடுக்கப்பட்டுள்ளது! பிரதமர் மோடி பேச்சு!

இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…

52 minutes ago

சம்பளத்தை விட அதிகமாக அபராதம் கட்டுகிறாரா திக்வேஷ் ரதி? உண்மை என்ன?

லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…

53 minutes ago

வார் 2 திரைப்படம் எப்போது வெளியீடு! ஹிருத்திக் ரோஷன் கொடுத்த அப்டேட்!

டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…

3 hours ago

இல்லாத அளவிற்கு உயர்ந்த தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி! முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…

4 hours ago

லக்னோவுக்கு எதிராக மும்பை தோல்வி! கதறி அழுதாரா ஹர்திக் பாண்டியா?

லக்னோ :  நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…

6 hours ago

வரிக்கு பதிலடி கொடுத்த சீனா “அவுங்க பயந்துட்டாங்க” டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…

6 hours ago