மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக அவரை எடுங்க! முன்னாள் கிரிக்கெட் வீரர் கருத்து!

Published by
பால முருகன்

ஐபிஎல் 2024 : ஆர்சிபி அணியில் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக வில் ஜாக்ஸை தேர்வு செய்யவேண்டும் என ஆகாஷ் சோப்ரா  கூறியுள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இன்று மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில், அணியில் மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக வில் ஜாக்ஸ் இடம்பெற அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசியஅவர் ” வில் ஜாக்ஸ் வெளியில் பெஞ்சில் தான் அமர்ந்திருக்கிறார். உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் அவரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

என்னை பொறுத்தவரை அவர் அதிகமான போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும் கூட அவர் மிகவும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். க்ளென் மேக்ஸ்வெல்லை விட்டுவிடுங்கள். அவருக்கு பதிலாக வில் ஜாக்ஸைக் கொண்டு வந்து விளையாட வையுங்கள். நாம் வார்த்தையால் இதனை சொல்வது ஈஸி தான். ஆனால் ஆர்சிபி நிர்வாகம் இதனை செய்யுமா என்பது சந்தேகம் தான்.

ஏனென்றால், இதே மைதானத்தில்தான் கிளென் மேக்ஸ்வெல் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒற்றைக் காலில் நின்று 200 ரன்கள் எடுத்தார் அந்த போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. எனவே, இந்த மைதானம் அவருக்கு ரசியானதாக இருப்பதால் கூட அவரை கண்டிப்பாகவே இன்று நடைபெறும் போட்டியில் விளையாட வைக்க்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

கடந்த சில போட்டிகளாக மேக்ஸ்வெல் ஆட்டம் பெரிய அளவில் இல்லை. இருப்பினும் மேக்ஸ்வெல் மீது அதிகம் நம்பிக்கை வைத்து கண்டிப்பாக அவர் திரும்பி பழைய பார்முக்கு வருவார் என அவருக்கு வாய்ப்புகளை கொடுக்கிறார்கள். என்னை பொறுத்தவரை மேக்ஸ்வெல்லுக்குப் பதிலாக வில் ஜாக்ஸ்க்கு வாய்ப்பு கொடுக்கலாம்” எனவும் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Recent Posts

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

7 minutes ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

7 minutes ago

பஹல்காம் தாக்குதல் : தீவிரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…

37 minutes ago

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட ராணுவ வீரர் உயிரிழப்பு.!

உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…

1 hour ago

ஜம்மு – காஷ்மீர் பகுதிகளுக்கு போகாதீங்க! அமெரிக்கா முக்கிய எச்சரிக்கை!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

1 hour ago

அடுத்த அதிரடி… பாகிஸ்தானின் ‘X’ பக்கம் இந்தியாவில் முடக்கம்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…

2 hours ago