ஆப்கானிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவு! கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாக உஸ்மான் கனி அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஊழல் புகாரை முன்வைத்து கிரிக்கெட்டில் இருந்து விலகிய ஆப்கானிஸ்தான் அணி வீரர் உஸ்மான் கனி.

இந்தியாவில் நடைபெற உள்ள 2023 ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகி வரும் ஆப்கானிஸ்தான் அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணி நாளை முதல் வங்கதேசத்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கிடையில், தொடருக்கு முன்னதாக, அணியின் வீரர் ஒருவர் கிரிக்கெட்டிலிருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்.

வங்கதேசம் தொடருக்காக அறிவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணியில் சேர்க்கப்படாத தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கனி, சமூக வலைத்தளத்தில் ஒரு கடுமையான அறிக்கையை வெளியிட்டார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் நடைபெற்று வருவதாக பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்து, கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக உஸ்மான் கனி அறிவித்துள்ளார்.

உஸ்மான் கனி ட்விட்டர் பதிவில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளேன். கிரிக்கெட் வாரியத்தில் உள்ள ஊழல் தலைமை என்னை பின்வாங்க வைத்துள்ளது. நான் எனது கடின உழைப்பைத் தொடர்வேன், சரியான நிர்வாகம் மற்றும் தேர்வுக் குழு அமைக்கப்படும் என ஆவலுடன் காத்திருப்பேன். அது நடந்தவுடன், நான் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்காக விளையாடுவேன். அதுவரை என் தேசத்துக்கு ஆதரவு அளிப்பேன்.

மேலும், வங்கதேசத்துக்கு எதிரான தொடருக்கு தேர்வு செய்யப்படாததற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சாடியுள்ளார். அனைத்து வடிவங்களில் இருந்தும் என்னை அணியில் இருந்து நீக்கியதற்கு இந்த நிர்வாகம் முறையான விளக்கம் அளிக்கவில்லை, கிரிக்கெட் வாரியம் நல்லவர்கள் கைக்கு செல்லும் வரை அணிக்கு திரும்பமாட்டேன். நான் நீக்கப்பட்டதற்கு தலைமை தேர்வாளரிடம் இருந்து திருப்திகரமான பதில் வரவில்லை. இதனால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்க முடிவு செய்துளேன் என்றுள்ளார்.

26 வயதான உஸ்மான் கனி வங்காளதேசத்துக்கு எதிரான சமீபத்திய தொடரில் ஆப்கானிஸ்தான் அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உஸ்மான் கனி ஆப்கானிஸ்தானுக்கு 17 ஒருநாள் மற்றும் 35 டி20 போட்டிகளில் முறையே 435 மற்றும் 786 ரன்கள் எடுத்துள்ளார். அவர் 20 முதல் தர போட்டிகளில் விளையாடி 39.35 சராசரியில் 1456 ரன்களை எடுத்துள்ளார். அவர் இதற்கு முன்பு பங்களாதேஷ் பிரீமியர் லீக்கில் விளையாடியுள்ளார், ஆனால் அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

37 mins ago

தமிழகத்தில் சனிக்கிழமை (19-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…

42 mins ago

தமிழ்தாய் வாழ்த்தில் விடுபட்ட “திராவிட நாடு.”., ஆளுநர் விழாவில் சலசலப்பு.!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…

1 hour ago

“இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிக்க முயற்சி”…ஆளுநர் ரவி பரபரப்பு பேச்சு!!

சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…

2 hours ago

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

3 hours ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

3 hours ago