சிறந்த ஸ்பின் பவுலிங் கொண்ட 5 ஐபிஎல் அணி எது தெரியுமா ?

Published by
அகில் R

IPL 2024 : நாளை மறுநாள் தொடங்கவுள்ள ஐபிஎல் தொடருக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு என்பது இருந்து வருகிறது. ஐபிஎல் ரசிகர்கள் பலரும் பல விதமாக அனைத்து அணிகளில் இடம்பெற போகும் வீரர்களை பட்டியல் இட்டு சமூக வலைத்தளத்தில் கலகலப்பாக பேசி வருகின்றனர். அப்படி ரசிகர்களின் பார்வையில் இருந்து வரும் ஒன்றுதான் சிறந்த ஸ்பின் பவுலிங் கொண்ட ஐபிஎல் அணி.

Read More :- IPL 2024 : என்னை ‘கிங்’-னு கூப்டாதீங்க..! ‘விராட்’ னே கூப்டுங்க ..!

நடைபெற போகும் ஐபிஎல் தொடரின் போட்டிகள் இந்தியா என்பதால் இந்தியாவில் உள்ள மைதானங்களில் பல பிட்ச் ஆனது வேக பந்து பவுலிங்கை விட ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகம் அதிகமாக இருக்கும். அதனால் ரசிகர்கள் எந்த அணியின் ஸ்பின் பவுலிங் பலமாக இருக்கும் என கலகலப்பாக பேசி கொண்டு வருகிறார்கள். அப்படி பலம் வாய்ந்த ஸ்பின் பவுலிங் உள்ள ஐபிஎல் அணியை நாம் தற்போது பார்க்கலாம். இதில் 5-வது அணியாக ரசிகர்கள் குறிப்பிடுவது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியாகும்.

லக்னோ அணியில் ரவி பிஷ்னோய், அமித் மிஸ்ரா, குர்னால் பாண்டியா போன்ற வீரர்கள் உள்ளனர். 4-வது அணியாக ரசிகர்கள் குறிப்பிடுவது டெல்லி கேபிட்டல்ஸ் அணியாகும். இந்த அணியில் ஃபார்மில் இருக்கும் குலதீப் யாதவ் மற்றும் அக்சார் பட்டேல் ஆகியோர் உள்ளனர். இந்த இருவரின் பேட்டிங் ஃபார்மும் சிறப்பாக இருக்கும். 3-வதாக ரசிகர்கள் குறிப்பிடும் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தான். இந்த அணியில் சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, சுயாஷ் சர்மா போன்ற மிஸ்ட்ரி ஸ்பின் பவுலர்கள் உள்ளனர்.

Read More :- IPL 2024 : லக்னோவ் அணியில் கே.எல்.ராகுல் ரெடி ..! ஆனாலும் ஒரு பிரச்சனை !

2-வதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், மகேஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, மொயின் அலி போன்ற வீரர்கள் உள்ளனர். இதில் முதலாவதாக ரசிகர்கள் குறிப்பிடும் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியாகும். ராஜஸ்தான் அணியில் யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆடம் சாம்பா மற்றும் ரியான் பராக் போன்ற வீரர்கள் உள்ளனர். ராஜஸ்தான் அணியில் பலம் வாய்ந்ததே அந்த அணியின் பவுலிங் செக்டின் தான்.

Published by
அகில் R

Recent Posts

கலால் வரி மட்டும் தான் உயர்வு…”பெட்ரோல் & டீசர் ரேட் உயராது”..மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…

11 minutes ago

பீகார் இளைஞர்கள் இடம்பெயரக் கூடாது! பேரணியில் ராகுல் காந்தி அட்வைஸ்!

பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…

44 minutes ago

“யார் அந்த தியாகி? பதில் சொல்லுங்க முதலமைச்சரே.,” இபிஎஸ் சரமாரி கேள்வி!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…

1 hour ago

CSK மீதான விமர்சனம்.., “இனி அப்படி நடக்காது” விளக்கம் கொடுத்த அஸ்வின் யூடியூப் சேனல்!

சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…

2 hours ago

அதிமுக வெளிநடப்பு.. சிங்கிளாக பேட்ஜை கழற்றிவைத்துவிட்டு பேசிய செங்கோட்டையன்.!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…

3 hours ago

தமிழ்நாடு பாஜக ‘புதிய’ தலைவர் யார்? பிரதமர் அருகில் கடைசி நேர இருக்கை ஒதுக்கீடு?

சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…

3 hours ago