தீபக் சஹார் 3 ஓவர் மட்டுமே வீசி தீபக் சஹார் 16 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை பறித்தார்.
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். 221 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக நிதீஷ் ராணா, சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே சுப்மான் கில் டக் அவுட்டானார். அதன் பின்னர் ராகுல் திரிபாதி களமிறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் நிதீஷ் ராணா 9 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர், மோர்கன் 7 மற்றும் சுனில் நரைன் 4 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த 4 விக்கெட்டையும் தீபக் சஹார் வீழ்த்தினார். 3 ஓவர் மட்டுமே வீசி தீபக் சஹார் 16 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை பறித்தார். கொல்கத்தா அணி மோசமான நிலையில் இருக்கும்போது ராகுல் திரிபாதியும் 8 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ராகுல் திரிபாதி விக்கெட்டை லுங்கி நிகிடி பறித்தார்.
தற்போது கொல்கத்தா அணி 7 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 53 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் தினேஷ் கார்த்திக் 6, ரஸ்ஸல் 22 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.…
கோவை : கோவையில் வரும் 26, 27ம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பூத் கமிட்டி கூட்டம் நடைபெற…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…