தீபக் சஹார் 3 ஓவர் மட்டுமே வீசி தீபக் சஹார் 16 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை பறித்தார்.
இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதி வருகிறது. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தனர்.
முதலில் இறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்களை எடுத்தனர். 221 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக நிதீஷ் ராணா, சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலேயே சுப்மான் கில் டக் அவுட்டானார். அதன் பின்னர் ராகுல் திரிபாதி களமிறங்கினார். அடுத்த சில நிமிடங்களில் நிதீஷ் ராணா 9 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர், மோர்கன் 7 மற்றும் சுனில் நரைன் 4 ரன்னில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இந்த 4 விக்கெட்டையும் தீபக் சஹார் வீழ்த்தினார். 3 ஓவர் மட்டுமே வீசி தீபக் சஹார் 16 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டை பறித்தார். கொல்கத்தா அணி மோசமான நிலையில் இருக்கும்போது ராகுல் திரிபாதியும் 8 ரன்னில் பெவிலியன் திரும்பினார். ராகுல் திரிபாதி விக்கெட்டை லுங்கி நிகிடி பறித்தார்.
தற்போது கொல்கத்தா அணி 7 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை பறிகொடுத்து 53 ரன்கள் எடுத்துள்ளனர். களத்தில் தினேஷ் கார்த்திக் 6, ரஸ்ஸல் 22 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…