இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு நியூலேண்ட்ஸ்,கேப் டவுன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி,முன்னதாக டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்த இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
அந்த வகையில்,கடந்த ஜன.19 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது.அதன்பின்னர்,களமிறங்கிய,இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 265 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்ததால்,1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி முன்னிலையில் இருந்தது.
இதனைத் தொடர்ந்து,இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கடந்த 21 ஆம் தேதி பார்ல் நகரில் நடைபெற்றது.இப்போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எடுத்தது.
இதையடுத்து,288 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 48.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து,7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று, தொடரையும் கைப்பற்றியது.
இந்நிலையில்,இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது (கடைசி) ஒருநாள் போட்டி இன்று மதியம் 2 மணிக்கு நியூலேண்ட்ஸ்,கேப் டவுன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியிலாவது,தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்த வேண்டும் முனைப்பில் இந்திய அணியினர் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால்,மறுபுறம் இந்தியாவை ஒயிட்வாஷ் செய்து 3-0 என்ற கணக்கில் வெற்றியை தழுவும் முயற்சியில் தென்னாப்பிரிக்கா அணியினர் உள்ளனர்.
இந்தியா சாத்தியமான லெவன் அணி:கேஎல் ராகுல்(கேப்டன்),ஷிகர் தவான், விராட் கோலி,ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்),சூர்யகுமார் யாதவ்,வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்கூர்,ஆர் அஷ்வின்,தீபக் சாஹர்,புவனேஷ்வர் குமார்,யுஸ்வேந்திர சாஹல்.
தென்னாப்பிரிக்கா சாத்தியமான லெவன் அணி:ஜன்னெமன் மலான், குயின்டன் டி காக்,டெம்பா பவுமா (கேப்டன்),ஐடன் மார்க்ரம்,ரஸ்ஸி வான் டெர் டுசென்,டேவிட் மில்லர்,அண்டில் பெஹ்லுக்வாயோ, வெய்ன் பார்னெல்,கேசவ் மகராஜ், சிசண்டா மாகலா,தப்ரைஸ் ஷம்சி.
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…