இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்துள்ளனர்.
இன்று இந்தியா, இங்கிலாந்து இடையே 2-ம் ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித், தவான் இருவரும் களமிறங்கினர்.
ஆனால், கடந்த போட்டியில் 98 ரன்கள் விளாசிய தவான் இன்றைய ஆட்டத்தில் தொடக்கத்திலே 4 ரன்னில் வெளியேறினார். பின்னர், கேப்டன் கோலி களமிறங்கினார். அடித்து விளையாட தொடங்கிய ரோஹித் 25 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின் இறங்கிய கே .எல் ராகுல், கேப்டன் கோலி உடன் இணைந்து சிறப்பாக விளையாடினர். இவர்கள் கூட்டணியில் 100 ரன்னிற்கு மேல் அடித்தனர்.
கோலி கடந்த போட்டி போல இந்தப்போட்டியிலும் அரைசதம் அடித்தார். இதைத்தொடர்ந்து, கோலி 66 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய ரிஷாப் பண்ட் கே .எல் ராகுலுடன் சேர்ந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். இவர்கள் கூட்டணியிலும் 100 ரன்னிற்கு மேல் அடித்தனர். அதிரடியாக விளையாடி வந்த கே .எல் ராகுல் சதம் விளாசி 108 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.
அடுத்த சில நிமிடங்களில் ரிஷாப் பண்ட் அரைசதம் அடித்து 77 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர், ஹர்திக் பாண்டியா 35, க்ருனால் பாண்டியா 12* களத்தில் நின்றார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 336 ரன்கள் எடுத்துள்ளனர்.
இங்கிலாந்து அணியில் சாம் கரண், அடில் ரஷீத் தலா ஒரு விக்கெட்டும், டாம் கரண், ரீஸ் டோப்லி தலா 2 விக்கெட்டையும் பறித்தனர். இங்கிலாந்து அணி 337 ரன்கள் இலக்குடன் களமிறங்கவுள்ளது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…