நாளை 2-வது டெஸ்ட்: கோலி தலைமையில் களமிறங்கும் இந்திய படை..!

Default Image

நாளைய 2-வது டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் தற்போது செய்து விளையாடி வருகிறது. இந்தியா -நியூசிலாந்து ஆகிய இரு அணிகள் இடையே 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதலில் நடைபெற்ற 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து, 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் கான்பூரில் நடந்த முதல் டெஸ்ட் டிரா ஆனது.

இந்நிலையில், இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையே 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. 20 ஓவர் தொடர் மற்றும் முதல் டெஸ்டுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட கேப்டன் விராட் கோலி நாளைய டெஸ்டில் போட்டியில் விளையாடுகிறார். கடந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயரின் முதல் டெஸ்ட் போட்டி, அறிமுகம் போட்டியிலே முதல் இன்னிங்சில் சதம் விளாசி 105 ரன்களும், 2-வது இன்னிங்சில் அரை சதம் விளாசி 65 ரன்களும் அடித்தார்.

சுழற்பந்தில் அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜடேஜா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். முதல் டெஸ்டில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடும். நாளைய 2-வது டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்