இன்று மழைக்கு வாய்ப்பு.. தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையிலான 2-வது டி20 போட்டி ..!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  டி20 , ஒருநாள்  மற்றும்  டெஸ்ட் தொடர்களில்  விளையாடவுள்ளது. இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் டி20 போட்டி நேற்று முன்தினம் டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் மைதானத்தில் இரவு 7:30 மணிக்கு தொடங்க இருந்தது.

ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து மழை பெய்ததால் தென்னாப்பிரிக்கா – இந்தியா மோத இருந்த முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரு அணிகளுக்கான 2-வது போட்டி இன்று  க்கெபர்ஹா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ்  மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இதன் பின்னர், தொடரின் மூன்றாவது போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மழைக்கு வாய்ப்பு:

டர்பனில் நடைபெற இருந்த முதல் டி20 போட்டியில் மழை குறுக்கிட்டது  போல, இன்றை போட்டியிலும் மழை வரலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, மழையால் போட்டி கைவிடப்படலாம். மாலை 5 மணிக்கு மழை பெய்ய  20 சதவீதம் வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஈரப்பதம் 73.5% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில், இந்த போட்டி உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும். ஆனால் போட்டியின் நடுவில் பனி வருவதற்கான சாத்தியக்கூறுகள் முற்றிலும் இல்லை என்பது நல்ல செய்தியாக உள்ளது. இதனால் இரண்டாவது போட்டியிலும் ரசிகர்கள் ஏமாற்றமடைவார்களா..? என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Pakistan vs Bangladesh 2025
tn govt
NZ vs BAN
Ilayaraja Biopic
mp sudha anbumani
Jayalalithaa and pm modi