2-ஆம் அரை இறுதி போட்டி ..! கயானாவில் மழைக்கு 80% வாய்ப்பு!

Published by
அகில் R

கயானா: நடப்பாண்டில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் முதல் அரை இறுதி போட்டியானது இன்று காலை நடைபெற்றது. இதில் தென்னாபிரிக்கா அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடிய தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.

மேலும், இதன் மூலம் 2024ம் ஆண்டின் 20 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் ஐசிசி தொடரில் தென்னாபிரிக்கா அணி முதன்முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது 2ம் அரை இறுதி போட்டியானது இன்று வெஸ்ட் இண்டீஸ்ஸில் உள்ள கயானாவில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதவிருக்கிறது. இது வரை டி20 உலகக்கோப்பை தொடரில் 4 முறை நேருக்கு நேர் சந்தித்து கொண்ட இந்த இரு அணிகளும் 2-2 என வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

லீக் சுற்றுகளிலே வெளியேறும் தருவாயில் இருந்த இங்கிலாந்து அணி அவர்களது சிறப்பான விளையாட்டால் தற்போது அரை இறுதி போட்டி வரை தகுதி பெற்றுள்ளனர். அதே போல மறுமுனையில் இந்திய அணியும் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு கயானாவில் நடைபெற இருக்கும் இந்த 2-வது அரை இறுதி போட்டியில் மழை பெய்ய 80% சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.

ஒருவேளை மழை பொழிவு ஏற்பட்டு போட்டி நடத்த முடியாமல் போனால் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்று விடும். இந்த போட்டியில் இரவு 12.10 மணி வரையில் கால அவகாசம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட சமயம் வரை போட்டி நடைபெறவில்லை என்றால் இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

இதற்கு மிக முக்கிய காரணம் இந்திய அணி லீக் சுற்றிலும், சூப்பர் 8 சுற்றிலும் 1 தோல்வியை கூட பெறாமல் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளதால் போட்டி தடைபட்டால் இந்திய அணி இறுதி போட்டியில் நுழைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
அகில் R

Recent Posts

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

11 hours ago

ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!

திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…

12 hours ago

RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

13 hours ago

RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!

ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…

15 hours ago

“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!

மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…

15 hours ago

“நான் துணை முதலமைச்சரா.?” பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…

16 hours ago