2-வது ஒருநாள் போட்டி: 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி.!

Published by
Muthu Kumar

இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, முதல் ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் தற்போது இரண்டாவது ஒரு நாள் போட்டி நேற்று கேன்டர்பரியில் உள்ள செயின்ட் லாரன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதன்படி களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் சிறிது தடுமாறினாலும் பிறகு நிலைத்து நின்று ஆடி, நல்ல ஸ்கோரை எடுத்தது. 50 வர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 333 ரன்கள் சேர்த்தது.

கேப்டன் ஹர்மன்ப்ரீத்கவுர் அபாரமாக ஆடி 111 பந்துகளில் 143 ரன்கள் எடுத்து இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்தார். ஹர்லீன் தியோல் 58 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 40 ரன்களும் சேர்த்தனர்.

334 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்கம் முதலே விக்கெட்கள் சரிந்த விதம் இருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 45 ஆவது ஓவரில் இங்கிலாந்து அணி 245 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டேனியல் வியாட் 65 ரன்களும், அலைஸ் கேப்சி மற்றும் எமி ஜோன்ஸ் தலா 39 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியில் ரேனுகா சிங் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை சாய்த்தார்.

இதன்மூலம் இறுதியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று தொடரையும் வென்றது.

Recent Posts

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

24 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

26 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

43 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

1 hour ago