KKRvsSRH 1st Inningss [file image]
KKRvsSRH : ஐபிஎல் தொடரின் 3-வது போட்டியாக கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும் தற்போது விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் பலம் வாய்ந்த பேட்டிங்கை கொண்ட கொல்கத்தா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
இதன் மூலம் தொடக்க வீரர்களாக சுனில் நரேனும், பிலிப் சால்ட்டும் களமிறங்கினர். பிலிப் சால்ட் ஒரு பக்கம் அதிரடி காட்ட, மறுமுனையில் இருந்த சுனில் நரேன் முதல் நிதிஷ் ராணா வரை களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்கள். இதனால் 51-4 என இக்கட்டான நிலையில் நடராஜன் பந்து வீச்சுக்கு கொல்கத்தா அணி திணறி வந்தது.
அதன் பிறகு களமிறங்கிய ரமன்தீப் சிங், பிலிப் சால்ட்டுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். இதனால் கொல்கத்தா அணி இக்கட்டான நிலையில் இருந்து தப்பித்ததோடு அணியின் ஸ்கோரையும் உயர்த்தியது. பொறுமையாக விளையாடி ரன் சேர்த்த பிலிப் சால்ட் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய ஆண்ட்ரே ரஸ்ஸல் அதிரடி காட்ட தொடங்கினார். அவருடன் இணைந்த ரிங்கு சிங்கும் அதிரடி காட்ட கொல்கத்தா அணி பெரிய ஸ்கோரை நோக்கி நகர்ந்தது. இறுதியில், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 208 ரன்கள் எடுத்தது.
கொல்கத்தா அணியில் அதிரடி காட்டிய ஆண்ட்ரே ரஸ்ஸல் 25 பந்துகளில் 65* ரன்கள் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹைதராபாத் அணியில் நடராஜன் 3 விக்கெட்டை எடுத்து அசத்தினார். இதை தொடர்ந்து 209 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்க உள்ளது ஹைதராபாத் அணி.
சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று, ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமின் பைசரன் புல்வெளியில் நடந்த…
உதம்பூர் : ஜம்மு -காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்…
பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கர பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு,…