ஐபிஎல் 2024 : வெளுத்து வாங்கிய சுப்மன் கில்… பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்கு..!

Published by
murugan

ஐபிஎல் 2024 : முதலில் இறங்கிய குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர்.

இன்றைய ஐபிஎல்  போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகிறது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள  நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக விருத்திமான் சாஹா ,
சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்.

ஆட்டம் தொடங்கிய 3-வது ஓவரில் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா 11 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த  கேன் வில்லியம்சன் , சுப்மன் கில் உடன் ஜோடி சேர்ந்துசிறப்பாக விளையாடினர். நிதானமாக ஆடி வந்த கேன் வில்லியம்சன் 26 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய தமிழக வீரர்  சாய் சுதர்சன் வந்த வேகத்தில் அதிரடியாக விளையாட தொடங்கினார். அதன்படி சாய் சுதர்சன்  19 பந்தில் 6 பவுண்டரி உட்பட மொத்தம் 33 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். இதற்கிடையில் தொடக்க வீரர் சுப்மன் கில் 31 பந்தில் அரைசதம் விளாசினார்.

அடுத்து வந்த மற்றோரு தமிழக வீரரான விஜய் சங்கர் வந்த வேகத்தில் வெறும் 8 ரன்கள் எடுத்து நடையை காட்டினார். குஜராத் ஒருபுறம் விக்கெட்டை இழந்தாலும் மறுபுறம் சுப்மன் கில்  அதிரடியாக விளையாடி 48 பந்தில் 4 சிக்ஸர் , 6 பவுண்டரி உட்பட 89* ரன்கள் குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார்.

இறுதியாக குஜராத் 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் கிங்ஸ் அணியில் ரபாடா 2 விக்கெட்டையும்,   ஹர்ஷல் படேல்,   ஹர்பிரீத் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.

Recent Posts

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: 10 பயங்கரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு.!

காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…

1 hour ago

கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!

கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…

2 hours ago

‘விஜய் திறந்து வைத்திருந்த கூட்டணி கதவையும் நான் மூடினேன்’ – திருமாவளவன்.!

திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…

3 hours ago

பூத் கமிட்டி கருத்தரங்கம்: கோவை மாவட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!

கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…

3 hours ago

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

18 hours ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

19 hours ago