சொந்த மண்ணில் தாண்டவம் ஆடிய ஹைதிராபாத் அணி! 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Default Image

இன்று 38-வது நடைப்பெற்றது .இப்போட்டியில் ஹைதிராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதினர்.இப்போட்டி ஹைதிராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைப்பெற்றது.

இந்த போட்டியில், டாஸ் வென்ற  ஹைதிராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய கொல்கத்தா அணி தொடக்க வீரர்களாக  சுனில் நாரைன்,கிறிஸ் லின் இறங்கினர்.

சுனில் நாரைன் 25 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 51 ரன்களும், ரிங்க்கு சிங் 30 ரன்களும் எடுத்தனர். இறுதியாக ஹைதிராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் சேர்ந்தனர்.

ஹைதிராபாத் அணி பந்து வீச்சில் கே காலேல் அகமது 3 விக்கெட்டையும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டையும் வீழ்த்தினார்.மேலும் சந்தீப் சர்மா,ரஷீத் கான்ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

ஹைதிராபாத் அணியில்  முதலாவதாக டேவிட் வார்னர், ஜானி பியர்ஸ்டோவ் களமிறங்கினர்.ஆட்டம் தொடக்கத்திலே இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர்.

டேவிட் வார்னர் 67 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். ஹைதிராபாத் அணியில் அதிகபட்சமாக ஜானி பியர்ஸ்டோவ் 80*ரன்கள் குவித்தார்.

இறுதியில் ஹைதிராபாத் அணி 15 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்