வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர்.
ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், பங்களாதேஷ் அணியும் மோதி வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரராக கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கிறிஸ் கெய்ல் 4, எவின் லூயிஸ் 6 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மியர் வந்த வேகத்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து இறங்கிய கீரன் பொல்லார்ட் 8 ரன் எடுத்த போது மைதானத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் ஒரு பந்து கூட சந்திக்காமல் ரன் அவுட் ஆனார். பிறகு ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன் இருவரும் ஜோடி சேர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 40 ரன்கள் எடுத்தார். அதில், 4 சிக்ஸர் , 1 பவுண்டரி அடங்கும்.
அடுத்த பந்திலே ரோஸ்டன் சேஸ் போல்ட் ஆகி 39 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் ஷரீபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், மெஹ்தி ஹசன் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…