வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர்.
ஐசிசி T20 உலகக் கோப்பை தொடரின் இன்றை தினத்தில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், பங்களாதேஷ் அணியும் மோதி வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரராக கிறிஸ் கெய்ல், எவின் லூயிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கிறிஸ் கெய்ல் 4, எவின் லூயிஸ் 6 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய ஷிம்ரோன் ஹெட்மியர் வந்த வேகத்தில் 9 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து இறங்கிய கீரன் பொல்லார்ட் 8 ரன் எடுத்த போது மைதானத்தை விட்டு வெளியேறினார். அடுத்து வந்த ஆண்ட்ரே ரஸ்ஸல் ஒரு பந்து கூட சந்திக்காமல் ரன் அவுட் ஆனார். பிறகு ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன் இருவரும் ஜோடி சேர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன் 40 ரன்கள் எடுத்தார். அதில், 4 சிக்ஸர் , 1 பவுண்டரி அடங்கும்.
அடுத்த பந்திலே ரோஸ்டன் சேஸ் போல்ட் ஆகி 39 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 142 ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் ஷரீபுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான், மெஹ்தி ஹசன் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…