இந்திய வீரர் முரளி விஜய், ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல்நாள் ஆட்டத்தில் சதம் கண்ட நிலையில் தான் அடித்த இந்தச் சதம், அணுகுமுறை, பிட்ச், பவுலிங் உள்ளிட்டவை பற்றி சுருக்கமாகப் பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது:
காலையில் கடினமாக இருந்தது. நான் விரும்பும் அளவுக்கு, வசதியாக உணரும் அளவுக்கு என்னால் பந்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் நான் என் பேட்டிங் குறித்து கடினமாக உழைத்தேன், ஐபிஎல் போட்டிகளின் போது மைக் ஹஸ்ஸியுடன் பணியாற்றினேன், எனவே நேற்றைய சதத்துக்கு அவருக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
ஷிகர் தவண் ஒரு முனையில் அடித்து ஆடினாலும் நான் என் ஆட்டத்திட்டத்தின் படிதான் ஆடினேன்,நேற்று ஷிகர் தவண் அபார ஆட்டம் ஆடினார் ஆனால் நான் ஷிகர் தவண் போல் பேட் செய்ய வேண்டும் என்று நினைக்க முடியாது.
3 தொடக்க வீரர்களும் சிறப்பாக ஆடுகிறோம். கொஞ்சம் பவுன்ஸ் இருந்தது, நல்ல ஸ்போர்டிங் பிட்ச் இது. நாங்களும் பந்துகளை சரியான இடத்தில் பிட்ச் செய்வோம் என்று நம்புகிறேன்.
ஆப்கான் வீரர்களும் நன்றாக மகிழ்ச்சியுடன் ஆடினார்கள் என்றே நினைக்கிறேன் ஆட்ட முடிவில் கை ஓங்கியது. நாங்கள் இன்னும் சில வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. இந்தச் சதம் எனக்கு முக்கியத்துவம் வாய்ந்தது, சமீபமாக நீண்ட நேரம் பேட் செய்யவில்லை. எனவே இந்தப் போட்டியில் இப்படி ஆடியது முக்கியமானது.
இவ்வாறு கூறினார் விஜய்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…