கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் சாதனைகளை பின்னுக்கு தள்ளி ரோகித் ஷர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்!
இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் ஷர்மா தனது 20-வது ஒருநாள் சதத்தினை பூர்த்தி செய்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
நேற்றை போட்டியில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்திய ரோகித் ஷர்மா 152(117) ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார். இந்த ரன்மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 150 ரன்கள் கடந்த வீரர்கள் பட்டியலில் தற்போது ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்துள்ளார். இவருக்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர், டேவிட் வார்னர் தலா 5 முறை கடந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா – மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய அணி 322 ரன்கள் குவித்தது. 323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவரா ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே வெளியேறினார். எனினும் நின்று விளையாடிய ரோகித் தனது 20-வது சத்ததினை பூர்த்தி செய்து 152 ரன்கள் குவித்தார். மறுமுனையில் விராட் கோலியும் தனது 36-வது சத்தினை பூர்த்தி செய்தார்.
விராட் கோலியின் இந்த சதத்தின் மூலம் குறைந்த இன்னிங்ஸில் அதிக சதம் அடித்தவர் என்ற பெயர் பெற்றார். இவரும் சச்சின் சாதனையினை தான் முறியடித்தார். விராட் கோலியின் இந்த சாதனையினை விளம்பரப்படுத்திய சமூக வலைதளங்கள், ரோகித் ஷர்மாவின் சாதனையினை விளம்பரப்படுத்த மறந்துவிட்டனர் என்று ரோஹித் சர்மா ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
DINASUVADU
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…