வங்காள தேச ரசிகர்களிடம் மன்னிப்பு?இனி இந்த மாதிரி செய்ய மாட்டேன் ….

Default Image

கடைசி 3 ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு  35 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், கடைசி இரண்டு ஓவர்கள் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. போட்டியின், 18 வது ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான் வீசினார். லெக் பை மூலம் ஒரு ரன் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். கடைசி இரண்டு ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 19 வது ஓவரை ருபெல் ஹொசைன் வீசினார்.

வங்கதேச அணி, இவர் அனுபவ வீரர் என்பதால் அதிகபட்சம் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தாலும்,போட்டியில் வென்று  விடலாம் என  கணக்கு போட்டது. இப்போதுதான் தினேஷ் கார்த்திக் களமிறக்கினார். ருபெல் ஹொசைன் வீசிய பந்துகளில் ஒன்ரை மட்டும் விட்டுவிட்டு அந்த ஓவரில் 22 ரன்கள் அடித்தார். இந்த அணியில் வெற்றிக்கு இந்த ஓவர் முக்கிய திருப்புமுனையாக இருந்தது. அதேபோல், வங்கதேசத்தின் தோல்விக்கும் இது முக்கிய காரணமாக இருந்தது. எனவே, முக்கியமான ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்த ருபெல் ஹொசைன் வங்காள தேச ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வருந்தியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்