யோ-யோ டெஸ்ட் ஒன்னும் அப்படி இல்ல!யோ-யோவை கண்டுபிடித்தவர் ஜென்ஸ் பேங்ஸ்போ கருத்து

Published by
Venu

யோ-யோவை கண்டுபிடித்த டென்மார்க் விளையாட்டு, உடற்தகுதி நிபுணர் டாக்டர் ஜென்ஸ் பேங்ஸ்போ,இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தேர்வுக்கு மிகப்பெரிய தகுதியாக யோ-யோ டெஸ்ட் வைக்கப்பட்டுள்ளது குறித்து விளக்கமளித்துள்ளார்.

Related image

இந்திய கிரிக்கெட் அணியின் இயக்குனர் ரவிசாஸ்திரி, யோ-யோ டெஸ்ட் வேண்டாமென்றால் போங்கள் என்று  கூற மற்றவர்களும் அணித்தேர்வுக்கு அடிப்படைத் தகுதியாக கிரிக்கெட்டில் யோ-யோவைக் கொண்டு வருவது பற்றி கடும் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

யோ-யோவை கண்டுபிடித்த டென்மார்க் விளையாட்டு, உடற்தகுதி நிபுணர் டாக்டர் ஜென்ஸ் பேங்ஸ்போ கூறுகையில்,ஒரு குறிப்பிட்ட விளையாட்டுப் பந்தயத்தில் அந்த குறிப்பிட்ட வீரர் விளையாடக்கூடிய திறன் படைத்தவரா என்பதைச் சோதனை செய்வதே யோ-யோ. ஒரு வீரரை அணியில் தேர்வு செய்யலாமா வேண்டாமா என்பதை நிர்ணையிக்க யோ-யோவை பயன்படுத்தக் கூடாது.

இந்த டெஸ்ட்டை ஒரு முறையான உபகரணமாகப் பயன்படுத்தி ஒரு வீரரை மேலும் ஃபிட் ஆக்கத்தான் யோ-யோ.

யோ-யோ சோதனையை இப்படித்தான் கால்பந்து கிளப்புகள் பயன்படுத்துகின்றன. இதைவிடவும் திறமையும் மனரீதியான ஆற்றலும் மிக முக்கியமானவை. ஒரு வீரர் தனக்கு இட்டப் பணியை நிறைவேற்றத் தகுந்த உடற்தகுதியுடன் இருக்கிறா என்ற அடிப்படையை நிர்ணயிக்கலாமே தவிர ஒருவரை அணியில் தேர்வு செய்வது பற்றியோ, தேர்வு செய்யாமல் இருப்பது பற்றியோ யோயோவை அடிப்படையாகக் கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.இந்தியா வைத்துள்ள 16.1 என்ற அளவு கோல் கடினமானதல்ல. ஒரு வீரர் இந்த லெவலை எட்டாமல் கூட அணிக்காகச் சிறப்பாக ஆட முடியும். ஒரு குறைந்தபட்ச ஃபிட்னெஸ் அளவு வீரருக்குத் தேவை என்று நினைக்கும் பட்சத்தில் 16.1 ஒன்றும் கடினமானதல்ல.

கால்பந்தாட்ட வீரர்கள் அதிகமாக உடல்தகுதி கொண்டவர்கள் 20 வரை தொடுவார்கள். அந்தந்த விளையாட்டுக்கு என்ன அளவுகோல் தேவையோ அதற்குத்தக்கவாறு யோ-யோவைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் அணித்தேர்வுக்காக இதனைப் பயன்படுத்துவது வித்தியாசமானது. அதாவது நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

Published by
Venu

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

9 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

9 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

9 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

9 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

10 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

10 hours ago