மனைவி வேண்டும்…கேர்ள் பிரண்ட் வேண்டும்…வாழைப்பழம் வேண்டும்…அடம்பிடிக்கும் கோலி…!!

Published by
Dinasuvadu desk
2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலகக்கோப்பைப் போட்டியின் போது தங்களுக்கு பல்வேறு வசதிகள் தேவை என்று கிரிக்கெட் நிர்வாகிகள் குழுவிடம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கோரிக்கை வைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத்தில் பிசிசிஐ நிர்வகிக்கும் நிர்வாகிகள் குழுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அப்போது, 2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும்ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பைப் போட்டி குறித்தும், இந்திய அணி பங்கேற்பு, செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நிர்வாகிகள் குழுவிடம் சில கோரிக்கைகளை வைத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்துக்கு உலகக்கோப்பை போட்டியில்விளையாடச் செல்லும் இந்திய அணி அந்நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு செல்லுபோது ரயிலில் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம். அப்போது, வீரர்களுக்குத் தனியாக முன்பதிவு செய்யப்பட்ட ரயில்பெட்டி தேவை என்று கோரியுள்ளார். இது வீரர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களுடன் அழைத்துவருபவர்களின் பாதுகாப்பை மனதில் வைத்து கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய வீரர்கள் அனைவரும் உலகக்கோப்பைப் போட்டி முழுவதும் தங்களின் மனைவி, கேர்ள்பிரண்ட் ஆகியோரை அழைத்துவந்து தங்களுடன் தங்கவைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோலி கோரியுள்ளதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக இங்கிலாந்து பயணத்தின்போது, வீரர்களுக்கு அங்குக் கிடைக்கும் பழங்கள், உணவுகளை வழங்குவார்கள். அவ்வாறு இல்லாமல், இந்திய வீரர்கள் உண்ணும் இந்திய வகை உணவுகள், பழங்கள் வழங்க வேண்டும்.குறிப்பாக வாழைப்பழம் வழங்கப்பட வேண்டும். இது வீரர்களுக்கு உடனடியான சத்தையும், புத்துணர்ச்சியையும் களத்தில் அளிக்கக்கூடியது எனத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டி இங்கிலாந்தில் மே 30-ம் தேதி தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை நடக்கிறது. மிகப்பெரிய போட்டித்தொடரான உலகக்கோப்பையில் மொத்தம் 48 ஆட்டங்கள் நடக்கின்றன. சவுத்தாம்டனில் நடக்கும் முதல்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
dinasuvadu.com
Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

15 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

15 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

15 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே? வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

15 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

16 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

16 hours ago