பெங்களூரை கதிகலங்க வைத்த தல தோனி! கடைசி பந்தில் வெற்றிகரமான தோல்வி அடைந்த சென்னை!

Default Image

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 161 ரன் எடுத்தது .குறிப்பாக அந்த அணியின் பார்த்தீவ் பட்டேல் 53 ரன்கள் மொயின் அலி 26 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் ஓவரிலேயே 2 விக்கெட்டுகளை இழந்தது, ஸ்டெயின் வீசிய முதல் ஓவரில் ஷேன் வாட்சன் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்த பந்துகளில் இழந்தனர்.

பின்னர் ராயுடு மற்றும் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. ராயுடு 29 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய கேதார் ஜாதவ் 9 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 11 ரன்னிலும் வெளியேறினர்.

தனி ஒருவனாக போராடிய டோனி அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 84 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 160 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்ததுவ்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்