ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஒருநாள் அணியில் தன்னைத் தேர்வு செய்யாதது தனக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது என்று உஸ்மான் கவாஜா வருந்தியுள்ளார்.
இது குறித்து ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவுக்காக உஸ்மான் கவாஜா கூறியதாவது:
உள்ளபடியே கூற வேண்டுமெனில் நான் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளேன். ஜஸ்டின் லாங்கரிடமும் பேசினேன், அணித்தேர்வுக்குழுவினரிடத்திலும் பேசினேன். ஆனால் சில விஷயங்களை நாம் கட்டுப்படுத்த முடியாது. அடுத்த முறை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளாக ஒருநாள் கிரிக்கெட்டில் நிறைய ரன்களைக் குவித்தேன், குறிப்பாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில்.
இப்போதைக்கு அணியில் நான் வருவதை அவர்கள் விரும்பவில்லை, காரணம் என்னவெனில் ‘என்னை அணிக்குள் அவர்கள் விரும்பவில்லை’ என்பதே. என்னுடைய சிகப்புப் பந்து ரெக்கார்டை விட ஒருநாள் கிரிக்கெட்டில்தான் நான் சிறப்பாக ஆடியுள்ளேன். சில வேளைகளில் விஷயங்கள் ஒத்துப்போவதில்லை.
ஜஸ்டின் லாங்கரிடம் பேசினேன், அவர் தெளிவுபடுத்தினார். எனவே நான் தலையைத் தொங்கப்போட்டு கடுமையாக உழைக்க வேண்டும் அவ்வளவே.
குறைந்த ஓவர் கிரிக்கெட்டில் நான் தொடக்க வீர்ராகக் களமிறங்கி வருகிறேன். எனக்கு தொடக்கத்தில் இறங்க மிகவும் பிடிக்கும். அந்த ரோல் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 3ம் நிலையில் இறங்க விரும்புகிறேன். எதுஎப்படியிருந்தாலும் டாப் 4ற்குள் இறங்கவே விரும்புகிறேன்.மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…