நாட்டுக்காக ஆடுகிறேன் இரட்டை சதத்திற்க்காக அல்ல…ரோஹித் அதிரடி பேட்டி

Published by
Dinasuvadu desk

இரட்டை சதம் அடிக்கும் நினைப்புடன் ஒரு போதும் பேட்டிங் செய்வதில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். 
மும்பை பிராபோர்னில் நேற்று முன்தினம் நடந்த 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை துவம்சம் செய்தது. இதில் துணை கேப்டன் ரோகித் சர்மா (20 பவுண்டரி, 4 சிக்சருடன் 162 ரன்), அம்பத்தி ராயுடு (100 ரன்) சதத்தின் உதவியுடன் இந்திய அணி நிர்ணயித்த 378 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 36.2 ஓவர்களில் 153 ரன்னில் சுருண்டது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆட்டம் இழந்த போது 37 பந்துகள் மீதம் இருந்தது. கடைசி வரை களத்தில் நின்றிருந்தால் நிச்சயம் தனது 4-வது இரட்டை சதத்தை எட்டியிருப்பார்.வெற்றிக்கு பிறகு 31 வயதான ரோகித் சர்மா நிருபர்களிடம் கூறியதாவது:-
எப்போதுமே பேட்டிங்கின் போது சதம் எடுக்க வேண்டும் என்றோ, இரட்டை செஞ்சுரி போட வேண்டும் என்றோ நினைத்து ஆடுவதில்லை. முடிந்த வரை நிறைய ரன்கள் குவித்து அணியை நல்ல நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனே விளையாடுவேன். இதுவரை நான் மூன்று இரட்டை சதங்கள் அடித்துள்ளேன். ஒவ்வொரு முறையும் இரட்டை சதம் அடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்ததில்லை. இந்த ஆட்டத்தின் போது கூட எதிர்முனையில் நின்ற அம்பத்தி ராயுடு என்னிடம் வந்து, இரட்டை சதம் அடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார். ஆனால் நான் எனது பேட்டிங் மீது மட்டும் கவனம் செலுத்தினேனே தவிர, இரட்டை சதம் அடிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கவில்லை. அது மட்டுமின்றி இந்த மைதானத்தில் ‘சேசிங்’ செய்வது கடினமாக இருக்காது. அதனால் அணிக்கு போதுமான ரன்கள் குவிப்பதை உறுதிசெய்யும் முனைப்புடன் செயல்பட்டேன். மற்றபடி இரட்டை சதம் எனது மனதில் தோன்றவில்லை.
dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

5 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

5 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

5 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

5 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

6 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago