மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி வெற்றிக் களம் கண்டவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாட்டின் போக்கையே மாற்றும் வல்லமை படைத்தவர்.தோனிக்கு சரியான மாற்று வீரரை கண்டறியாமல் உள்ளது என்று இந்திய அணி மீது விமர்சங்கள் எழுப்பபட்டது.
இந்நிலையில் தான் தற்போது நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தொடரில் அபாரமாக விளையாடி தொடரை இந்திய அணி கைப்பற்றியது.இது குறித்து தனது யூ டியூப் சேனலில் பேசியுள்ள அக்தர், முதல் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி பின் நடந்த இரு போட்டிகளில் அபாரமாக விளையாடி வென்றதுடன் தொடரையும் கைப்பற்றிய விஷயம் எளிதானது அல்ல என்று பாராட்டு தெரிவித்தார்.
மேலும் அவர் அதில் பேசுகையில் இந்த தொடர் மூலம் முன்னாள் தோனிக்கு மாற்று வீரரை இந்திய அணி இறுதியாக கண்டறிந்து உள்ளது என்று நான் நினைக்கிறேன். அது வேறு யாரும் இல்லை Manish Pandey தான். மணிஷ் விளையாடிய கடைசி இரு போட்டிகளிலும் போதுமான பந்துகளை எதிர்கொள்ள அவர்க்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.என்றாலும் லிமிடெட் ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தோனியின் இடத்திற்கு மாற்றாக Manish Pandey இருப்பதை இந்திய அணி உணர்ந்து உள்ளது.
இதே போல Shreyas Iyer ஒரு முழு வீரராக தற்போது உருவெடுத்து வருகிறார். இந்த வீரர்கள் மூலம் இந்திய அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலிமையாக மாறும் என்று குறிப்பிட்ட இரண்டு வீரர்களும் ஐ.பி.எலில் நிறைய விளையாடி உள்ளனர், அதனால் ஆட்டத்தில் ஏற்படும் அழுத்தத்தை எவ்வாறு கையாள்வது என்பது அவர்களுக்குத் தெரியும். இதன் மூலம் முக்கியமான போட்டிகளை சிறப்பாக அவர்கள் முடிப்பார்கள் என்று அக்தர் நம்பிக்கை தெரிவித்தார்..
சென்னை : மத்திய மகாராஷ்டிராவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அடுத்த 24…
டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை…
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் 51-வது படமான ''Ace'' திரைப்படம் நேற்று (மே 23) அன்று திரையரங்குகளில் வெளியானது.…
டெல்லி : வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில்…
குஜராத் : பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தானியரை சுட்டுக் கொன்றதாக இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை…
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான…