தொடர்ந்து 7 தோல்விகளுக்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு கிடைத்த ஆறுதல்…!!

Published by
Dinasuvadu desk

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், தனது தொடர் தோல்விகளுக்கு அந்த அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்த ஸ்மித், முக்கிய வீரர் வார்னர் உள்ளிட்ட மூவர் ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால், ஆஸ்திரேலிய அணி தனது பழைய கம்பீரம் இல்லாமலேயே விளையாடி வந்தது. அனுபவம் இல்லாத வீரர்களால் தடுமாறிய அந்த அணி, சமீபத்தில் பாகிஸ்தான் உடனான டி20 தொடரை முழுமையாக இழந்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது. இதன் மூலம், தொடர்ந்து 7 ஒருநாள் போட்டிகளில் தோல்வி என்ற மோசமான நிலைக்கு ஆஸ்திரேலியா உள்ளானது. இன்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மீண்டெழும் என்று பலர் எதிர்பார்த்த நிலையில், அந்த அணி எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 231 ரன்கள் எடுத்தது. பின்னர், விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால், 7 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. மேலும், தொடர் தோல்விக்கும் அந்த அணி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஆஸ்திரேலியா கடைசியாக விளையாடிய 19 ஒருநாள் போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

16 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

16 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

16 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

16 hours ago