தொடரில் 4-1 என்ற கணக்கில் தோல்வி …!தொடர் நாயகனாக விராட் கோலி தேர்வு …!

Default Image

டெஸ்ட் தொடரின் ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐந்தாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

 

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் ஆடிய அந்த அணி 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன்பிறகு களமிறங்கிய இந்திய 292 ரன்கள் எடுத்தது. தற்போது, போட்டியின் நான்காவது நாளான இன்று 8 விக்கெட் இழப்புக்கு 423 ரன்களுடன் 463 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரரும், முன்னாள் கேப்டனுமான அலஸ்டர் குக் 147,ரூட் 125 ரன்களும் அடித்தனர்.

 

இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா.விகாரி தலா மூன்று விக்கெட்டுகளும்,சமி இரண்டு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.இதனால் இந்திய அணி வெற்றி பெற 464 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.இதன் பின்னர் ராகுல் மற்றும் பண்ட் ஜோடி சிறப்பாக விளையாடி மீட்டது.

Related image

 

பின்னர் ராகுல் 149 மற்றும் பண்ட் 114 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.94.3 ஒவர்களில் 345 ரன்களுக்கு இந்திய அணி ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற கணக்கில் ஏற்கெனவே வென்றிருந்த இங்கிலாந்து அணி, கடைசி டெஸ்ட் போட்டியிலும் வென்று 4-1 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்தது.

இந்நிலையில்5 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரின் ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.5 போட்டிகளில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 593 ரன்கள் அடித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்