தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் சர்ச்சை ..!

Default Image

தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க அனுமதியில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11-ந் தேதி முதல் ஆகஸ்டு 12-ந் தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுகிறது.இந்தப்போட்டியில் 8 அணிகள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டது . இதன் அறிமுக போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியும், 2-வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

Image result for தமிழ்நாடு பிரீமியர் லீக்இந்த நிலையில் 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் நெல்லையில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. 3-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.இந்த நடப்பு தொடரில் இருந்து வெளி மாநில விளையாட்டு வீரர்களை களமிறக்க T.N.P.L நிர்வாகம் முடிவு செய்தது.இந்நிலையில் இது தொடர்பாக T.N.P.L நிர்வாகம் அனுமதி வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

Image result for தமிழ்நாடு பிரீமியர் லீக்இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் வெளிமாநில வீரர்கள் பங்கேற்க அனுமதியில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.மேலும் வெளிமாநில வீரர்களை அனுமதிக்கக் கோரிய T.N.P.L நிர்வாகத்தின் மனுவையும் தள்ளுபடி செய்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்