டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று: 10 ரன் அடித்து வெற்றி பெற்றது மலேசியா..

Published by
Dinasuvadu desk

டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் மலேசியா-மியான்மர் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மலேசியா அணி மியான்மர் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இதனையப்டுத்து களமிறங்கிய மியான்மர் அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக மலேசிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் பவன்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 1 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் 3 ஓவர் மெய்டன் ஆகும். மியான்மர் அணியின் 6 வீரர்கள் டக் அவுட் ஆகினர். அந்த அணி எடுத்த 9 ரன்களில் 3 ரன் ஒய்டின்(WIDE) மூலம் கிடைத்தது. அந்த அணி 9 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் மழை பெய்தது.
இதனால் நீண்ட நேரம் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மழை நின்றதும் டக்வர்த் லீவிஸ் முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி மலேசியா அணிக்கு 8 ஓவர்களில் 6 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஓரிரு பந்தில் எட்டக்கூடிய இலக்குதான் என நினைத்து களமிறங்கிய மலேசிய அணிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவெனில் துவக்க வீரர்கள் இருவரும் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மலேசிய வீரர் சுகன் ‘தல தோனி’ ஸ்டைலில் சிக்சர் விளாசி ஆட்டத்தை நிறைவு செய்தார். இதன்மூலம் மலேசிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற வினோதமான போட்டியை கண்டதில்லை என சமூகவலைத்தளத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.
DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

6 hours ago