டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று: 10 ரன் அடித்து வெற்றி பெற்றது மலேசியா..

Default Image

டி20 உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற போட்டி ஒன்றில் மலேசியா-மியான்மர் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மலேசியா அணி மியான்மர் அணியை பேட்டிங் செய்ய பணித்தது. இதனையப்டுத்து களமிறங்கிய மியான்மர் அணி மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. குறிப்பாக மலேசிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் பவன்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 1 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதில் 3 ஓவர் மெய்டன் ஆகும். மியான்மர் அணியின் 6 வீரர்கள் டக் அவுட் ஆகினர். அந்த அணி எடுத்த 9 ரன்களில் 3 ரன் ஒய்டின்(WIDE) மூலம் கிடைத்தது. அந்த அணி 9 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் மழை பெய்தது.
இதனால் நீண்ட நேரம் ஆட்டம் தடைபட்டது. பின்னர் மழை நின்றதும் டக்வர்த் லீவிஸ் முறைப்படி இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி மலேசியா அணிக்கு 8 ஓவர்களில் 6 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஓரிரு பந்தில் எட்டக்கூடிய இலக்குதான் என நினைத்து களமிறங்கிய மலேசிய அணிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அது என்னவெனில் துவக்க வீரர்கள் இருவரும் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த மலேசிய வீரர் சுகன் ‘தல தோனி’ ஸ்டைலில் சிக்சர் விளாசி ஆட்டத்தை நிறைவு செய்தார். இதன்மூலம் மலேசிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்ற வினோதமான போட்டியை கண்டதில்லை என சமூகவலைத்தளத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்