ஜடேஜா 86 நாட் அவுட்…!கவுரவமான ஸ்கோரை எட்டிய இந்திய அணி …!292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது …!

Default Image

இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் 292 ரன்கள் எடுத்ததுள்ளது.

இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் செய்தது.

இங்கிலாந்து அணி 122 ஓவர்களில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பட்லர் 89,குக் 71 ரன்கள் அடித்தனர்.இந்திய அணியின் பந்துவீச்சில் ஜடேஜா 4, பூம்ரா மற்றும் சர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 95 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 292 ரன்கள் எடுத்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 86*, ஹனுமா விகாரி 56, விராட் 4ரன்கள் அடித்தனர் .

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் அண்டர்சென்,அலி,ஸ்டோக்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 40 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்