சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது….
சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது….
இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா. இவருக்கு சமூகலைதலங்களில் ரசிகர்கள் அதிகம். இவர் தனது புகைப்படத்தை சமூகவலைதள பக்கத்தில் எதில் பதிவிட்டாலும் அது ரகிகர்கள் மத்தியில் வைரலாக பரவும். சமீபத்தில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்த விழாவில் எடுக்கப்பட்ட சாராவின் புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாக பரவியது.
இதை தொடர்ந்து, பலரும் சாரா பாலிவுட்டில் கால்பதிக்க உள்ளதாக கிசுகிசுக்களை பரப்பிவிட்டனர். சாரா மும்பையில் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் படித்தவர். தன் அம்மாவை போன்று லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். தற்போது வெற்றிகரமாகப் படிப்பை முடித்து பட்டமும் வாங்கிவிட்டார். மகளின் இந்தப் பெருமித தருணத்தைக் காண சச்சின் மற்றும் அஞ்சலி லண்டன் சென்றனர். சாரா தனது பட்டமளிப்பு விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் `நான் என்ன செஞ்சிருக்கேன் தெரியுமா’ என்று பதிவிட்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 20 வயதான சாரா பட்டமளிப்பு கறுப்பு அங்கி, தொப்பியில் க்யூட்டாக இருந்தார். சுட்டி பெண் சாராவின் புகைப்படங்களுக்கு வழக்கம்போல் லைக்ஸ் குவிந்தன… வாழ்த்துகள் சாரா!
சாரா பட்டம் பெற்றது குறித்து சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் `நேற்று தான் லண்டன் பல்கலைக்கழகத்தில் சேர வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது போல் இருக்கிறது. அதற்குள் நாள்கள் ஓடிவிட்டன. நீ பட்டமும் வாங்கிவிட்டாய். என்னையும் உன் அம்மாவையும் பெருமைப்படுத்திவிட்டாய். சுதந்திரமாகப் போ… உலகை வென்று வா சாரா…’ என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…