சச்சின் டெண்டுல்கரின் மகள் சாராவின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு அவர் அளித்த பதில் பதிவு கிரிக்கெட் ரசிகர்களை அன்பு மழையில் நனையச் செய்துள்ளது ..!

Published by
Dinasuvadu desk
ஒவ்வொரு தந்தைக்கும் அவர்களது பெண் குழந்தைகளிடம் அளவு கடந்த அன்பிருக்கும் என்று கூறலாம். அதே போல் தான் சச்சின் டெண்டுல்கருக்கும். தந்தையர் தினத்தன்று சச்சினின் மூத்த மகளான சாரா டெண்டுல்கர் இன்ஸ்டாகிராம் தளத்தில் தனது அப்பாவுடன் எடுத்த பழைய புகைப்படம் ஒன்றை பதிவு செய்து, அதில் பாதுகாப்பான, பாசமிகு  தந்தையாகவும் விளங்கி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் சச்சின் பதிவிட்டது கிரிக்கெட் பிரியர்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது. அதில், ‘அர்ஜூன் மற்றும் நீ என் வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சியான பரிசு. நீங்கள் கிடைக்க நான் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இருவரும் எப்போதும் எனக்கு சிறிய குழந்தைகள் தான். நீ என்னுடன் இருப்பதற்கு நன்றி’ என சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

தந்தை என்பதற்கு சச்சின் சிறந்த எடுத்துகாட்டாய் திகழ்கிறார் என்று அனைவரும் பாராட்டி வருகின்றனர். சச்சினுக்கு பிறகு அவரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஜூனியர் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

17 mins ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

51 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

55 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

1 hour ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

2 hours ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago