கேரளாவுக்கு வாருங்கள்…இந்திய கேப்டன் கோலி அழைப்பு…!!

Default Image
கேரளா வெள்ள பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீண்டு விட்டதாகவும், எனவே மக்கள் முன்பு போல வருமாறு விராட் கோலி பரிந்துரைத்துள்ளார்.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை(நாளை) நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் கோவளத்தில் உள்ள பீச் ரிசார்ட் ஒன்றில் தங்கியுள்ளனர்.
கேரளாவுக்கு சுற்றுலா வாருங்கள்: விராட் கோலி பரிந்துரைபீச் ரிசார்ட்டில் உள்ள விருந்தினர் பக்கத்தில் விராட் கோலி குறிப்பு ஒன்றை எழுதினார். அதில், ”கேரளாவில் இருப்பது பேரின்பம். இங்கு வருவதை விரும்புகிறேன். இந்த இடத்தின் ஆற்றலை நேசிக்கிறேன். கேரளாவின் அழகு அனுபவித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. கடவுளின் பிரதேசத்தில். அதன் அமைதியை, ஆற்றலைக் காண எல்லோரும் இங்கு வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.
கேரளா அதன் வெள்ள பாதிப்புகளில் இருந்து முழுமையாக மீண்டுவிட்டது. இப்போது சுற்றுலா வர பாதுகாப்பான இடமாக இருக்கிறது. ஒவ்வொரு முறை நான் இங்கு வரும்போது என்னை மகிழ்ச்சியூட்டும் கேரளாவுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்