உத்தரப் பிரதேச ரஞ்சி அணியில் கடந்த 2005-06 ஆம் ஆண்டு விளையாடிய பிரவீன் குமார் 41 விக்கெட்டுகளையும், 386 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். பந்துகளை ஸ்விங் செய்வதில் சிறப்பாக செயல்படும் பிரவீன் குமார் 2011-ம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், காயம் காரணமாக அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை.கடைசியாகக் கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் மாதம் 30-ம் தேதி தாக்காவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிதான் பிரவீன் குமார் இந்தியாவுக்காக விளையாடிய கடைசிப் போட்டியாகும். அதன்பின் இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.
ஐபிஎல் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கிங்ஸ்லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளில் பங்கேற்று பிரவீன் குமார் விளையாடியுள்ளார். இந்நிலையில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பிரவீன் குமார் திடீரென அறிவித்துள்ளார்.
32 வயதான பிரவீன் குமார் தனது ஓய்வு குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
”நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதில் எந்தவிதமான வருத்தமும் இல்லை. நான் முழுமனதோடு இதுவரை கிரிக்கெட் விளையாடிவிட்டேன். உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஏராளமான இளம் வீரர்கள், சிறந்த பந்துவீச்சாளர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். நான் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தால், அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும். மற்ற வீரர்களின் எதிர்காலம் மிகவும் முக்கியம். என்னுடைய காலம் முடிந்துவிட்டது, அதை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்து விளையாடச் செய்த கடவுளுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…