களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்ட வீரர்…! ஐ.சி.சி அதிரடி முடிவு …!

Default Image

இங்கிலாந்து பந்துவீச்சளார் ஸ்டுவட் பிராட் மீது விதிமுறையை மீறியதற்காக  போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதம் விதித்துள்ளது ஐ.சி.சி.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது.இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்களை குவித்தது. இதனையடுத்து ஆட்டத்தின் 110-வது ஓவரில் இந்தியா தனது ஆட்டத்தினை டிக்ளர் செய்துகொள்வதாக அறிவித்தது.
இதன் பின்னர் இங்கிலாந்து அணி 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்தது.
இந்த போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து பந்துவீச்சளார் ஸ்டுவட் பிராட் இந்திய அணி வீரர் ரிசத் பண்ட் விக்கெட்டை வீழ்த்தியதும் அவர் அருகே சென்று ஆக்ரோசமாக கத்தினார்.இதனால் அவருக்கு ஐ.சி.சி-யின் விதிமுறையை மீறியதற்காக  அவருக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்