எங்கு விளையாடுகிறேன் என்பது பற்றி கவலை இல்லை : குல்தீப்..!

Default Image

இந்திய அணி மூன்று 20 ஓவர், மூன்று ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு இங்கிலாந்தில் சென்றுள்ளது.இதன்படி இந்திய அணி முதலாவது இருபது ஓவர் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதேபோல் இங்கிலாந்து அணி இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Image result for குல்தீப்பின்னர் கடைசி இருபது ஓவர் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மேலும் 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

இந்நிலையில் இன்று இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.இந்த ஆட்டம் நட்டிங்கமில் உள்ள ட்ரென்ட் பிரிட்ச்சில் நடைபெறுகின்றது.

Image result for குல்தீப்சமீபத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 5-0 என்ற கணக்கில் வைட்-வாஸ் செய்தது .இதனால் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.இந்திய அணியை பார்க்கும் போது தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றும் நிலையில் ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் இன்றைய ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

Image result for குல்தீப்இங்கிலாந்து அணி 45 ஓவர்களில் 216 ரன்கள் அடித்துள்ளது.இந்திய அணியின் பந்து வீச்சில் குல்தீப் 6 விக்கெட்டுகள் மற்றும் சாஹல் ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.குல்தீப் 10 ஓவர்களில் 25 விட்டு கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து  குல்தீப் கூறியதாவது; என்னை பொறுத்தவரை எங்கு விளையாடுகிறேன் என்பது பற்றி கவலை இல்லை. ஆடுகளத்தில் பந்து சற்று திரும்புவதை உணர்ந்தேன். இதனால் பந்தில் வேறுபாடுகளை காட்டினால் அது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும் என்று உணர்ந்தேன் . டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என்று கூறினார்,.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்